இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 மே, 2021

ருத்ராட்ச காய்ந்த பழம்


ருத்ராட்சம் என்பது ருத்ராட்ச மரத்தில் கிடைக்க கூடிய பழத்தில் இருக்கும் விதையை மூடி இருக்கும் ஒரு ஓடு பகுதியாகும்,இந்த ஓட்டின் மேல்பகுதியில் அதன் சதைபகுதி இருக்கும் இவை அனைத்தும் சேர்ந்த பகுதியே ருத்ராட்ச பழம் ஆகும்.இந்த பழத்தின் நிறம் அடர்ந்த கருநீலம் ஆகும்.இதற்க்குள் தான் ஒரு முகம் முதல் அனைத்து முகம் அடங்கி உள்ளது,ஒவ்வொறு முக ருத்ராட்சத்திற்க்கு என தனி மரம் கிடையாது.



 நம்மிடம் காய்ந்த ருத்ராட்ச காய்ந்த பழம் கிடைக்கும்.


சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு,

 https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3C...

பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்.


தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி                                                                                                                                 9486072414


இருபத்தொரு முக ருத்திராட்சம்

 


மிகவும் அரிதான இந்த ருத்திராட்சம் தனாதிபதியும் வடக்குத்திக் பாலரான குபேர பகவானுடையது. செல்வத்துக்கெல்லாம் செல்வம் தரும் மணியிது. இவ்வுலகின் சகல இன்பங்களையும், செல்வத்தையும் ஒருங்கே அள்ளித்தரவல்லது. பயணங்களின் போது பாதுகாக்கும் தன்மையுடையது.

ஆளும் கிரகம் பூமாதேவியாகும்



சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு,

 https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3C... 

பொருள்கள்  வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம். 


தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி                                                                                                                                 948607241

இருபது முகி ருத்திராட்சம்


இது படைப்புக் கடவுள் பிரம்மதேவரின் கட்டுப்பாட்டில் உள்ள ருத்திராட்சமாகும். பூமித் தாயின் தொடர்புடையது. அளவற்ற செல்வம், அறிவு, மூளைத்திறன், விரும்பியவற்றை அடைதல் ஆகியவை தரும். மனித இனத்துக்காக எதையாவது உருவாக்க, படைக்க நினைப்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் உன்னதமான மணியாகும்.  



சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு,

 https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3C... 

பொருள்கள்  வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம். 


தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி                                                                                                                                 9486072414

பத்தொன்பது முக ருத்திராட்சம்

 


இந்த மணியானது ஶ்ரீமந்நாராணமூர்த்தியின் ஆளுமைக்குரியது. புதன் கிரகத்தின் நெருங்கிய சம்பந்தம் உள்ளது. இந்த உருத்திராட்சம் அதியுயர்ந்த உருவாக்க, வெளிப்பாட்டு (creative, manifestation) சக்திகளைக்  கொண்டது என 'கார்த்தியாயினி புராணம்' கூறுகிறது. இந்த மணியானதுதர்மத்துடன் கூடிய கல்வி, செல்வம், ஞானம், ஆரோக்கியம் அளிக்கக்கூடியது.

நமது வாழ்வின் தர்மத்தையும் நோக்கத்தையும் புரிய வைக்கும் சக்தியுள்ள ருத்திராட்ஷம்இதுவாகும்.



சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு,

 https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3C... 

பொருள்கள்  வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம். 


தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி                                                                                                                                 9486072414

பதினெட்டு முக ருத்திராட்சம்



இந்த மணியானது; பூதேவி/ஶ்ரீதேவிசமேத ஶ்ரீநாராயணக்  கடவுளின் ஒரு தேவியான பூதேவி (பூமித்தாய்)யின் ஆளுமைக்கு உட்பட்டது. பூமித்தாயைப் போல சகல உயிர்களிலும் பாரபட்சமின்றி அன்பு காட்டும் தன்மையும்; அவளது கருணையால் இந்த ருத்திராட்சம் அணிந்த ஒருவர் ஈடுபடும் எந்தக்காரியத்திலும் வெற்றியும், நிலம் சம்பந்தமான விடயங்களில் பெரும் இலாபங்களையும் ஈட்டித் தரவல்லது. உலகில் பெரும் செல்வங்களைக் குவிக்க கூடியது.



சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு,

 https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3C... 

பொருள்கள்  வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம். 


தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி                                                                                                                                 9486072414

பதினேழு முக ருத்திராட்சம்


இது நவதுர்க்கைகளின் (சக்தியின்) ஆறாவது வடிவமாகிய கன்னித் தெய்வம்

கார்த்தியாயினியின் கட்டுப்பாட்டில் உள்ள ருத்திராட்சமாகும். காத்தியாயினி தேவி சனிக் கிரகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவளாவாள். ஆகவே இந்த உருத்திராட்சம் சனியின் பாதிப்பு உள்ளவர்களுக்கு மிக நல்லது. மனதிற்கு விரும்பிய வாழ்க்கைத்துணைய அடைய இது உதவி செய்யும் எனக் கூறப்படுகிறது.இது மட்டுமல்லாது இந்த மணியானது அணியப்படும் போது இது நமது வாழ்வின் நான்கு நிலைகளின் (பிரம்மச்சரியம்/இல்லறம்/வானப்ரஸ்தம்/துறவறம்) ஊடாகவும் நம்மை வழிநடத்தி இறுதியில் மோட்சப் பிராப்தி தரவல்லது. இது மட்டுமல்ல ஜபதவதியானங்களுடன் சேர்த்து இதைத் தரிக்கும் போது இது அஷ்டமாசக்திகளையும்; பல்வேறு உபசித்துக்களையும் தரக்கூடியது; இவற்றில் மனோரீதியில் இது தீர்க்கதரிசனத்தையும், டெலிபதி, எதிர்காலம் அறிதல், உருவாக்க ஆற்றல் சிந்தனை (creative intelligence) போன்ற விடயங்களையும் உணரச் செய்யும் தன்மையுடையது என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த மணியானது எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றி வளமான வாழ்வைத் தரும். 




சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு,

 https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3C... 

பொருள்கள்  வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம். 


தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி                                                                                                                                 9486072414

பதினாறு முக ருத்திராட்சம்



 இந்த முக ருத்திராட்சம் 'மகா மிருத்யுஞ்சய மணி' என்று அழைக்கப்படும். இது சிவனைமுதற்கடவுளாகக் கொண்டது. சந்திரனை ஆளும் கிரகமாகக் கொண்டது. இது அறம், பொருள், இன்பம், ஆரோக்கியம், வாழ்விற் போதுமென்ற  மனோபாவம் எல்லாம் தரக்கூடியது. இதை அணிபவரைச்சுற்றிச் சிவனருள் ஒரு பாதுகாப்புக்கேடயமாகச்செயற்பட்டு அவரை எதிர்மறை எண்ணங்கள்; தீய சக்திகள்; விபத்துக்கள்; நோய் துன்பங்கள்; கடன் வழக்கு என்பவற்றிலிருந்து பாதுகாக்கின்றது. சிவனருளையும், வெற்றியையும் தேவநேயத்தையும் தந்து வாழ்வில் வெற்றி தரும் இந்த உருத்திராட்சம் அதி உத்தமமானது. 



சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு,

 https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3C... 

பொருள்கள்  வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம். 


தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி                                                                                                                                 9486072414

பதினைந்து முக ருத்திராட்சம்.



 இது பசுபதிநாத் சிவனைஆளுமையாக கொண்ட ருத்திராட்சமாகும். புதன் கிரகத்தின் சம்பந்தம் உடையது. இது உலகத்தின் தேவைகளை எல்லாம் ஒருங்கே தரக்கூடியது. அதேவேளை ஆத்மீக நாட்டத்தையும் தெய்வ உண்மைகளையும் தேடிப்போகச் செய்யும் தன்மையையும் கொண்டது. அநாகதச் (இருதய) சக்கரத்தை பேணிப் பாதுகாக்கும் தன்மையுடையது. குபேரனுக்கே செல்வம் வழங்கி, தான் பற்றற்றிருக்கும் யோக சிவனைப்போல வாழ வைக்கும் தன்மையுடையது. இதை அணியும் போது எல்லா மானுடர்களையும் நேசிக்கச் செய்யும் எண்ணத்தை இதயத்தில் உருவாக்கக்கூடியது. மன்னிக்கும் சுபாவத்தை ஏற்படுத்தும். தாராள சிந்தை, தர்ம சிந்தனைகளை ஏற்படுத்தும். உலக வாழ்க்கையில் இருந்து கொண்டு இதயத்தின் உயர்ந்த சிந்தனைகளூடாக ஆத்ம முன்னேற்றம் நோக்கி இட்டுச் செல்லும் தன்மையுடையமணியாகும்.



சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு,

 https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3C... 

பொருள்கள்  வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம். 


தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி                                                                                                                                 9486072414

பதினான்குமுகி ருத்திராட்சம்



 இது ஒரு அபூர்வமான ருத்திராட்சமணியாகும். இதைத் 'தேவமணி' என்றும் கூறுவர். இது ஆஞ்சேயப் பெருமான் அருளாட்சிக்கு உட்பட்டது. ஆஞ்சனேயர் நவக்கிரகங்களிடம் பெற்ற வரத்தின்படி, ஆஞ்சனேயர் கட்டுப்பாட்டிலிருக்கும் இந்தத் தேவமணியானது, நவக்கிரகங்களினது  தீய செயற்பாடுகளில் இருந்தும் காக்கும். முக்கியமாக செவ்வாய், சனி கிரகங்களின் எதிர்மறை விளைவுகளைத் தடுக்கும். ஏழரைச்சனி, அட்டமத்துச்சனி மற்றும் குறிப்பாக சனி செவ்வாய் தோஷங்கள் உள்ளவர்கள் அணிவது சிறப்பைத் தரும். தூய்மையான பக்தி மனோபாவத்தையும், தளராத விசுவாசத்தையும், ஆண்மையையும், புலன்களின் கட்டுப்பாட்டையும் தரும் இந்த தேவமணி அருமையானது. 




சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு,

 https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3C... 

பொருள்கள்  வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம். 


தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி                                                                                                                                 9486072414

பதின்மூன்று முக ருத்திராட்சம்


 இந்த மணியானது காமதேவனால் ஆளப்படுவது. இதனுடன் தொடர்பு பட்ட கிரகங்கள் வெள்ளியும் சந்திரனும் ஆகும். உலக இன்பங்களை, ஆசாபாசங்களை நேரிய வழியில் சரியான முறையிற் துய்த்து அவற்றைப் பூர்த்தி செய்து கொள்ள இந்த உருத்திராட்சம் உதவி செய்யும். அதே வேளை சித்தர்கள் இந்த 13 முகியை சித்துக்களைப் பெற்று குண்டலினியை விழிப்புறச் செய்ய உபயோகித்தாக கூறுவர்.




சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு,

 https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3C...

பொருள்கள்  வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்.


 தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி                                                                                                                                 9486072414


பன்னிரண்டு முக ருத்திராட்சம்



 இது முற்றிலும் சூரியனைச் சார்ந்த மணியாகும். ஆளும் தெய்வமும் ஆளும் கிரகமும் சூரியன் ஆகும். இது சூரியனைப் போன்ற பிரகாசம், ஆளுமை, தலைமை, ஆற்றல் தரும். பயம், நம்பிக்கையின்மையைபோக்கும். எவரையும் சார்ந்து நிற்கும் தன்மையினை இல்லாமல் ஆக்கும்.நோயில்லா உறுதியான உடலமைப்பைத் தரும்.  சூரிய கிரகத்தால் ஏற்படும் குறைகள் சிக்கல்களை நீக்கும்.



சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு,

 https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3C... 

பொருள்கள்  வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம். 


தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி                                                                                                                                 9486072414

பதினொரு முக ருத்திராட்சம்.



 இந்த மணியானது சிவ வடிவங்களாகிய அநுமன் உட்பட 11 உருத்திரர்களால் ஆளப்படுகிறது. இதை அணிவதனால் 1000 அஸ்வமேதயாகங்கள் செய்த பலனுண்டாகும் என வேத நூல்கள் தெரவிக்கின்றன. இதனை அணிவதனால் உயர்ந்த ஆத்மீகஅறிவும்; தெய்வீக சிந்தனையும்; நடுநிலையானமனமும் உயர்ந்த புத்திக்கூர்மையும்; புலன்களின் மீதான கட்டுப்பாடும்; பேச்சாற்றலும்; பயமின்மையும்ஆற்றலும் உருவாகும். மேலும் ஜபதவதியானங்களுக்கும், எல்லாக் கிரககட்டுப்பாடுகளுக்கும் நல்லது.



சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு,

 https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3C... 

பொருள்கள்  வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம். 


தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி                                                                                                                                 9486072414

திங்கள், 24 மே, 2021

பத்து முக ருத்ராட்சம்

 


மகாவிஷ்ணுவின் அம்சமாக பத்துமுக ருத்ராட்சம் பார்க்கப்படுகிறது. இது எல்லாக்கிரகங்களையும் கட்டுப்படுத்தும் தன்மையுடையது. மிக சக்தி வாய்ந்தது. எல்லாக் கிரகங்களினால் எற்படும் தீவினைகளிலிருந்து காக்கும். இது ஒரு பாதுகாப்புக் கவசத்தைப்போன்றது இதை அணிபவருக்கு ஏற்படும் தீய தாக்கங்கள் (பில்லி, சூனியம், கண்திருக்ஷ்டி, எதிர்மறை மனத்தாக்கங்கள்) எல்லாவற்றையும் உடைத்தெறியக்கூடியது. இதை அணிபவருக்கு நீதிமன்ற, காணி வழக்குகள் மற்றும் கடன் வழக்குத்தொல்லைகளினின்றும் காக்கும். குடும்பம் தலைமுறை தலைமுறையாகச் செழிக்கும். 



சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு,

 https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3C...

பொருள்கள்  வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்.


தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி                                                                                                                            9486072414

ஒன்பது முக ருத்ராட்சம்

 


 ஒன்பது முக ருத்ராட்சம் இராகு பகவான் ஆளுமைக்குரியது. ஆளும் தெய்வம் துர்க்கை (சக்தி).சக்தி அம்சமாகையால் இதை அணிவதனால் உடல், மனோ சக்தி கூடும். செயல் திறன் கூடும். பில்லி சூனியதுன்பங்கள்தாக்காது. மிக ஆற்றல் மிக்க மணியாகும். உலகத்துஇன்பங்களையும் ஆன்ம முன்னேற்றத்தையும் தந்து, நற்கதிக்குக் கொண்டு செல்லும்.


எந்த நட்சத்திக்காரர்கள் அணியலாம்?

அஸ்வினி,மகம்,மூலம்



 சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு,

 https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3C... 

பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம். 


தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி                                                                                                                           9486072414

எட்டு முகம் ருத்ராட்சம்



எட்டு முக ருத்ராட்ச கிரக ஆளுமை கேது பகவானுக்குரியது. ஆளும் கடவுள் விநாயகர் ஆவார். இதனை அணிவோருக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். அஷ்ட கணபதி, அஷ்ட லட்சுமி உள்ளிட்டோரின்ஆசியுண்டு. எட்டு முகிகடைகளை அகற்றும், வெற்றியைக்குவிக்கும்.பார்க்கப்படுவதால் புத்தி, நுண்ணிய அறிவு, செல்வ வளம் என்பனஅதிகரிக்கும்.


எந்த நட்சத்திக்காரர்கள் அணியலாம்?

திருவாதிரை,சுவாதி,சதயம் 



 சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு,

 https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3C... 

பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம். 


தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி                                                                                                                         9486072414

ஏழு முகம் ருத்ராட்சம்



ஏழு முக ருத்ராட்சம் திருமகள், இலட்சுமி தேவியின் ஆளுமைக்கு உரியது. தேவி திருமகளையும், சப்தகன்னிகள், ஆகியோரைக்குறிக்கும்அம்சமுமாகும். இதனை அடையாளப்படுத்தும் கிரகம் வெள்ளியாகும்.  இந்த ருத்ராட்சத்தைஅணியும்போது பாசம், அன்பு, இல்லறம், பணம், நிதி சிக்கல்களில் இருந்து விடுபட்டு படிப்படியாக வாழ்க்கை முன்னேற்றம், பண,நிதிநிலைமை உயர்வு ஆகியன ஏற்படும்.


எந்த நட்சத்திக்காரர்கள் அணியலாம்?

பூசம்,அனுசம்,உத்திரட்டாதி 



 சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு,

 https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3C... 

பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம். 


தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி                                                                                                                                 9486072414

ஆறு முகி ருத்திராட்சம்

 


ஆறு முக ருத்ராட்சம் செவ்வாய் பகவானை ஆளும் கிரகமாகக் கொண்டது. ஆளும் தெய்வம் முருகப் பெருமான். நம் அறிவு மேம்படவும்,  தலைமைப்பண்புகள் பெறவும், நேரிய சிந்தனைக்கும், அவசியமற்றஇச்சைகள்; மோகங்களைத் தவிர்க்கவும், இரத்த சம்பந்த நோய்களிலிருந்து ஆறுதல் பெறவும் இதை அணியலாம். பேரின்பத்தை பெற வழியை தேட இது உதவும்.


எந்த நட்சத்திக்காரர்கள் அணியலாம்?

பரணி,பூரம்,பூராடம்



 சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு,

 https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3C...

பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்.


 தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி                                                                                                                            9486072414

ஐந்து முகம் ருத்ராட்சம்



ஐந்து முக ருத்ராட்சம் ருத்ரகாலாக்னியின் ஆளுமைக்குட்பட்டது. குரு பகவானின் கூடாத பலன்களைசரிசெய்யக்கூடியது. சிவனதுஆசியுடையதாக, மங்களத்தின் இருப்பிடமாக பார்க்கப்படுகிறது. இதை அணிபவரின் ஆரோக்கியம், பக்தி, சிறப்பாகும். மனம் அமைதியடையும், ஆத்மீக உயர்நிலை; ஜபம்; மந்திர உச்சரிப்பு என்பவற்றின்பலத்தைக் கூட்டி நல்ல நிலைமைக்கு இட்டுச்செல்லும். சிவனாசி உள்ள மணி


எந்த நட்சத்திக்காரர்கள் அணியலாம்?

புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி 



 சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு,

 https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3C... 

பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம். 


தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி                                                                                                                                 9486072414 

நான்கு முக ருத்ராட்சம்

 


 நான்கு முக ருத்ராட்சத்தைஆளக்கூடியவர்பிரஹஸ்பதி; கோள் வியாழ பகவான். இதனை அணிபவர் ஆக்க சக்தியைபெறுவார். தன்னுள் இருக்கும் புத்தி கூர்மை,  பேச்சுத் திறமை, சாமர்த்தியசாதூர்யங்களைவெளிப்படுத்தக்கூடியது. எந்த போட்டியாளரோ, எதிரியோ அவர் முன் நிற்க முடியது. இதை முக்கியமாக மாணவர்கள் அணிவது உத்தமம்.


எந்த நட்சத்திக்காரர்கள் அணியலாம்?

ஆயில்யம்,கேட்டை,ரேவதி, 



 சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு,

 https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3C... 

பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம். 


தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி                                                                                                                       9486072414

மூன்று முகம் ருத்திராட்சம்



 இந்த ருத்ராட்சத்தை ஆளும் தெய்வம் அக்கினி ஆளும் கோளாக சூரிய பகவான் உள்ளார். தீயானது எல்லா கெட்டதையும் தன்னில் போட்டாலும் எரிப்பது போலவும் அதேவேளை       தான் தூய்மையாக இருப்பது போலவும் இதை அணியும் நபருக்கு கடந்த பிறவி கர்மங்கள் அழிக்கப்பட்டு விடும். வாழ்வில் நடந்த, நடக்க இருக்கும் அனைத்து தவறுகளிலிருந்தும்  விலகி துய்மை நிலையிற் பிறவியில்லாப்பெரு நிலை அடைவார்கள்.


எந்த நட்சத்திக்காரர்கள் அணியலாம்?

மிருகசீர்ஷம்,சித்திரை,அவிட்டம் 




 சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு,

 https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3C... 

பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம். 


தேவைப்படுவோர் அணுகவும்


சதுரகிரி இயற்கை அங்காடி                                                                                                                     9486072414

இரண்டு முக ருத்ராட்சம்



 சிவன் சக்தி இணைந்த சிவசக்தி உருத்ராட்சமாக பார்க்கப்படுகிறது இந்த இரு முக ருத்ராட்சம்.பாவத்தை நீக்கவல்ல இந்த ருத்ராட்சம், ஆண் - பெண் என இருவர் தம்பதியராக ஒருநிலை அடைவதைப் போல, ஒரு நிலைத் தன்மை அடைய மிகவும் உகந்தது. தம்பதியினர் இனிய இல்வாழ்வுக்கும் அணியலாம். கிரக கட்டுப்பாடு - சந்திரன்.



எந்த நட்சத்திக்காரர்கள் அணியலாம்?

ரோகிணி,ஹஸ்தம்,திருவோணம் 


 சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு,

 https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3C... 

பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம். 


தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி                                                                                                                                 9486072414


ஞாயிறு, 23 மே, 2021

ஒரு முகம் ருத்ராட்சம்



 


மிகவும் அரிதாக (நேபாளம்) கிடைப்பது; ஜாவா கிடைக்கும்.ஒரு முக ருத்ராட்சம் (ஏகமுகிஉருத்ராட்சம்). இது சிவனுடைய உருத்திராட்சம் மோட்சம் தரக்கூடிய அளவு சக்தி வாய்ந்தது. அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் அணிய உகந்தது. கிரக கட்டுப்பாடு - நவக்கிரகங்களையும் கட்டுப்படுத்தும் சக்தியுள்ளது.



எந்த நட்சத்திக்காரர்கள் அணியலாம்?

 கிருத்திகை.உத்திரம்,உத்திராடம்.


 சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு,

 https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3C...

பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்.


தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி                                                                                                                                                         9486072414

திங்கள், 10 மே, 2021

தேன்-சில வினோதங்கள்

தேன் ஒரு உன்னதமான உணவு,அதைவிட நிகரில்லா மருந்து,மேலும் மற்ற மருந்துகளை தேனில் கலந்து தரும் பழக்கம் நீண்ட காலமாக உள்ளது,இதற்க்கு முக்கிய காரணம் தேன் முழுமையாக எளிதில் உடனடியாக ஜீரணமாகி இரத்தத்தில் கலந்து உடலில் கலந்துவிடும்.தேனை மட்டும் தான் எப்போது வேண்டுமானலும் சாப்பிடலாம்,ஆனால் அளவோடு சாப்பிட வேண்டும்.


நமது நாக்கின் நூனி பகுதியில் தேனை தடவ அதுவே இரத்தத்தில் கலந்து நமக்கு ஆற்றலை தரும்.

தேனை செரிமானம் செய்யா இன்சுலின் தேவை இல்லை,

குடல் நோய் பாதிப்பு உள்ளவர்கள் நீரில் தேன் கலந்து மெதுவாக உமிழ்நீருடன் கலந்து அருந்த சிறந்த பலனை உடனடியாக கொடுக்கும்.

சுத்தமான தேனை நாம் அனுபவதின் மூலமாக தான் சுவைத்து உணர இயலும்.தேனை ஒரு கிளாசு நீரில் சிறிதளவு விட்டால் கரையாமல் அடியில் போய் நிற்க்கும் என்பது உண்மையல்ல,இதே போல் பேப்பரில் தேன் விட்டால் உறிஞ்சாது என்ற கூற்றும் உண்மை அல்ல.காரணம்தேனை மனிதன் சமைத்து தருவதில்லை,தேனிக்கள் பல்வேறு வகையான தாவரங்களில் உள்ள பூக்களில் இருந்து பல்வேறு காலநிலைகளில் இனிப்பு தன்மை உள்ள திரவத்தை எடுத்து அதை தேனாக மாற்றம் செய்து கொடுக்கிறது.பொதுவாக வெயில் காலங்களில் கிடைக்கும் தேன் சற்று கெட்டி தன்மையாக இருக்க வாய்ப்புகள்அதிகம்,காரணம் ,பூக்களில் உள்ள இனிப்பு திரவத்தில் நீர் தன்மை குறைவாக இருக்கும்,இதுவேகாலநிலைமாறமாற இனிப்பு திரவத்தில் நீர் தன்மை கூடி கொண்டே போகும்.கூடுகளில் தேனில் இருக்கும் நீர் கால நிலை பொருத்து ஆவியாதல் கூட குறைய இருக்கும்.இதனால் தான் நீரை விட சற்று கெட்டியான தேனும், ஜாம் போன்ற தேனும்,எண்ணைய்பதத்தில்தேனும் கிடைக்கும்.

 


இதேபோல்,தேன் ஏறக்குறைய அறுசுவைகளிலும் பல நிறங்களில் இருக்கும்.எடுத்துக்காட்டாக நாவல் மரம்,அத்தி,ஆலமரம் அதிகம் உள்ள இடங்களில் எடுக்கும் தேன் அதிக துவர்ப்புடன் கூடிய இனிப்பாக இருக்கும்.மலைவேம்பு,எள்,வேம்புஇவைகள் அதிகம் உள்ள பகுதியில் கிடைக்கும் தேன்  அதிக கசப்புடன் கூடிய இனிப்பாக இருக்கும்.நெல்,எலுமிச்சை,நெல்லிஇவைகள் அதிகம் உள்ள பகுதியில் கிடைக்கும் தேன்  அதிக புளிப்புடன் கூடிய இனிப்பாக இருக்கும்.மிளகு,காப்பி,இவைகள் அதிகம் உள்ள பகுதியில் கிடைக்கும் தேன்  அதிக கார்ப்புடன்(காரம்) கூடிய இனிப்பாக இருக்கும்.முக்கனிகள் மற்றும் இனிப்பு சுவை தரும் மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் கிடைக்கும் தேன் அதிக இனிப்பாக இருக்கும்.உவர்ப்பு சுவை உடைய தேனை இதுவரை சுவைத்தது இல்லை.

இதேபோல்நிறம்,மணம் கூட மாறுபடும்.

பொதுவாக தேனும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் படிப்படியாக தொடர்ச்சியாகவும் மெதுவாகவும் சர்க்கரை(கற்கண்டு) போல படியும்,இதனை அப்படியே எடுத்துப் பயன்படுத்தலாம்,சுவை அதிகமாக தான் இருக்கும்,உலர்ந்தும்,படிகமாகியும்,வெள்ளை நிறமாக மாறுவது இயற்கையானது, காரணம் தேன் என்பதே ஒரு அடர்த்தியான சர்க்கரை திரவம்தான் அதாவது 70 சதவீதம் சர்க்கரையும் 30 சதவீதம் நீரும் சேர்ந்த கலவை தான்,குறிப்பிட்ட காலத்தில் இந்த இரண்டும் தனிதனியா பிரிந்து விடவேண்டும் இது இயற்கையின் நியதியும் கூட..(எ.கா:சுண்ணாம்பும்,நீரும் கலந்த கலவை தெளிவது,பெயிட்கலவையில் மேலே நீர்மமும் கீழே வேதியியல் கலவையும் படிவது).தேன் கட்டியாவது,அல்லது உறைவது அல்லது படிகமாக மாற்றம் அடைய (ஒரு மாதம் முதல் இரண்டு வருடம் வரை காலம் எடுக்கும்)காரணம் அதில் உள்ள குளுக்கோஸ்(சர்க்கரை மூலக்கூறு) தான். நாம் உடனடியாக அது கலப்பட தேன் என்று முடிவுக்கு வந்துவிட கூடாது,விரைவில் படிகமாக மாற வெப்பநிலை ஒரு காரணமாக உள்ளது 10 டிகிரிசெல்சியஸ் கீழ் இருந்தால் தாமதம் ஆகும்,10 டிகிரி முதல் 21 டிகிரிசெல்சியஸ் வரை வெப்பநிலையில் விரைவாக படிகமாகமாறும்.21 டிகிரிசெல்சியஸ் வெப்ப நிலைக்கு மேல் செல்ல செல்ல படிகமாவது தாமதமாகும் ஆனால் தேனின் உயிர் சத்துக்கள் அழிய தொடங்கும்.


இந்த 70 சதவீதசர்க்கரையில் 30 முதல் 45 சதவீதம் ப்ரக்டோஸ்சும், 25 முதல் 40 சதவீதம் குளுக்கோஸ்சும் உள்ளது. மீதம் உள்ள 30 சதவீதம் நீரில் தான்,பூக்களின் 300 க்கும்மேல்பட்டசத்துகள்,குணங்கள்,மணங்கள் அடங்கி உள்ளது.இந்தகுளுக்கோஸ், ப்ரக்டோஸ் என்பது சர்க்கரையின் வகைகள் ஆகும்.ப்ரக்டோஸ் ஆனது குளுக்கோஸை விட மிகவும் அதிக இனிப்பு தன்மை கொண்டது,எனவே தேனில் அதிகமாக இனிப்பு தன்மை இருந்தால் அதில் ப்ரக்டோஸ் அதிக அளவு உள்ளது என்றும் குளுக்கோஸ் குறைந்த அளவு உள்ளது என்றும் பொருள், தேனில் இனிப்பு தன்மை குறைவாக இருந்தால் அதில் குளுக்கோஸ் அதிக அளவு உள்ளது என்றும் குறைந்த அளவு ப்ரக்டோஸ் குறைந்த அளவு உள்ளது என்றும் பொருள்.

ப்ரக்டோஸ் நீரில் அதிக அளவு கரையும் எனவே ப்ரக்டோஸ் அதிகம் உள்ள தேன் படிகமானால்தேனின்நிறத்திலே சேறு போல அடர்த்தி இல்லாமல் படிவமாகும். குளுக்கோஸ் நீரில் அந்த அளவு கரையாது எனவே குளுக்கோஸ் அதிகம் உள்ள தேன் படிகமாகும்போது,சிறிய சிறிய கற்கண்டு போல் வெள்ளை நிறத்தில் குருனை போல் படிகமாகும்.

இந்த மாதிரி தேன் கட்டியாவது,அல்லதுஉறைவது அல்லது படிகமாக மாற்றம் அடையாமல் நீண்ட காலம் இருக்ககூடிய தேன் வகைகள் உண்டு,அவை காலம் செல்ல செல்ல இறுகி நிற மாற்றம் அடைந்து விடும்.

 

தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி

9486072414(Whatsup, telegram)

 

சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு

   பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்....

Telegram:

https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3CrTLiCTA

 

சதுரகிரி மூலிகை மலைத்தேன்

மூலிகை மலைத்தேன் என்பது மலைத்தேனில் பல மூலிகை சாறுகள் மற்றும் வாசனை திரவியங்கள் கலப்பது அல்ல,இயல்பாகவே மலைதேனீக்கள் மலைக்காடுகளில் உள்ள மூலிகைகளில் உள்ள பூக்கள் மூலம் எடுக்கப்படுவதே ஆகும்.


பொதுவாக மலைதேனின் பயங்களை கூறுவதை விட சதுரகிரி மூலிகை மலைத்தேனை உபயோகம் செய்தவர்கள் கூறியவற்றை தொகுத்து உள்ளோம்.

நன்றாக பசி எடுக்க:

6 வயது பெண் குழந்தைக்கு உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பு ஒரு ஸ்பூன் தேன் சப்பிட நன்றாக பசி எடுக்கிறது.—6 வயது பெண் குழந்தைக்கு.இந்த குழந்தை காலையில் ஒரு தோசை அல்லது இரண்டு இட்லி ,மதிய உணவை சரிவர சாப்பிடாது,அப்படியெகொண்டுவரும்,இல்லை என்றால் கீழெகொட்டிவிடும்.பசி என்று கூறி உணவு வாங்கி சாப்பிட்டது இல்லை.சதுரகிரி மூலிகை மலைத்தேனைசப்பிட்ட அரை மணி நேரத்துக்குள் பசிக்கிறது என்று கூறி உணவை கேட்டு வாங்கி சாப்பிட்டது.என்றுகுழந்தையின் தந்தை கூறினார்.

உடல் எடை கூட:

மேலே குறிப்பிட அதே 6 வயது பெண் குழந்தை 30 நாளில் 4.3 கிலோ எடை கூடி உள்ளது.சென்னையில் உள்ள நண்பருக்குவிந்தணுக்கள் அதிகரிக்க மூலிகை சூரணம் சொல்லி தேனில் சாப்பிட வேண்டும் என்று கூறினேன்.நம்முடியசதுரகிதேனுடன்பொடியை கலந்து சாப்பிட்ட 50 நாளில் 7 கிலோ வரை எடை கூடியது.

உடல் எடை குறைய

கடலூர் நண்பர் முருங்கைஇலையில் தேன் கலந்து கசாயம் வைத்து குடித்தால் எடை குறையும் என்று கூறி 3 மாதத்தில் 11 கிலோ வரை குறைத்தார்(இதனுடன் காலை மாலை 8 வடிவ நடைப்பயிர்ச்சி 20 நிமிடம் செய்தார்)

இரத்தம் ஊற:

52 வயது பெண்ணுக்கு 3 ஸ்பூன் தேன் உடன் நாட்டுமதுளை தோல் உடன் 150 கிராம் அரைத்து வடிகட்டி அருந்தியபோது 6 என்றா அளவில் இருந்த ஹீமொகுளோபின் அளவு 8.1 என்ற நிலைக்கு 14 நாளில் வந்துவிட்டது.

இரத்த அழுத்தம் இயல்பகா:

மேலெ கூறிய அதே பெண்ணுக்கு 176/108 என்ற அளவில் இருந்த இரத்த அழுத்தம் 147/89 என்ற நிலைக்கு 14 நாளில் வந்துவிட்டது.

எடுக்கும் மருந்துகளின் வீரியம் அதிகரிக்க.

பொதுவகா தேனில் எடுக்ககூடிய மருந்துகளை சதுரகிரி மூலிகை மலைதேன் வழியாக எடுக்கும் போது மற்ற மலைத்தேனைகாட்டிலும் 5 மடங்கு அதிகமாக வேலை செய்கிறது.இதுபயன்படுத்திய அனைவரும் கூறியது.

ஆண்மை தன்மையை அதிகரிக்க.

இஞ்சி,கல்உப்பு,பேரரத்தை தலா இரண்டு கிராம் இவற்றை தேனில் அரத்து பூசி காய்ந்தவுடன் உடலுறவு கொள்ள ஆண்குறி வலுவாக மாறும் என்பது சித்தர்கள் குறிப்பு. வேறு தேனை விட சதுரகிரி தேன் 5 மடங்கு பலன் கிடைத்தது.

திக்குவாய் குணம் பெற. 4 மாதம் தொடச்சியாக,,3 வயது குழந்தைக்கு 15 மில்லிதேனைஇரவில் பனியில் வைத்து அதிகாலை 5.30 மணிக்கு நாக்கில் தடவி வந்தனர்.பேச்சு குளறுபடி குணம் கிடைத்தது,(பெரியவர்களுக்கு குணம் கிடைக்கவில்லை)

லேகியதின்சக்தியை கூட்ட…நாங்கள் மற்ற மலைகளில் இருந்தும் தேன் எடுத்து வருகிறோம்.பலசித்தவைதியரகளுக்கு தந்து கொண்டு இருக்கிறோம்.அவர்கள்கணக்குபடிசதுரகிரி மூலிகை மலைத்தேன் மற்ற வகை மலைத்தேனைகாட்டிலூம் பலமடங்கு லேகியத்தின்சத்தை உடல் எடுத்து கொள்கிறது என்று கூறி உள்ளனர்.

மேல் கூறிய அனைத்து பலன்களும்இயல்பாகவெமலைத்தேன் கொண்டு இருக்கும் என்பதில்எந்தவித மாற்று கருத்தும்இல்லை.மற்ற வகை மலைத்தேனை காட்டிலும் பலன் (குடலின் சத்து உட்கிரகிக்கும்திறனைமுழுமையடைய செய்கிறது) பல மடங்கு அதிகம் என்பது சோதனை செய்ததில் கண்ட உண்மை.

தேவைப்படுவோர் அணுகவும்

 

சதுரகிரி இயற்கை அங்காடி

9486072414(Whatsup, telegram)


சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு

  பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்....

Telegram:

https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3CrTLiCTA

நாட்டு முருங்கை விதை



இயற்கை விளைச்சல் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நாட்டு முருங்கை விதை கிடைக்கும்.நன்றாக முற்றி மரத்திலேயே காய்ந்த முருங்கைகாயில்இருந்து,வெள்ளை விதை மற்றும் கூடான விதை போன்றவற்றை கழித்து நல்ல தரமான மரமாகமுளைக்கும் தன்மை கொண்ட விதைகள் மட்டும் சேகரிக்கப்படுகின்றது.வீடுகளில் உள்ள தனி மரத்தில் இருந்து சேகரிக்கப்படுகிறது.(கரூர் மற்றும் திருச்சி பகுதிகளில் உள்ள கிராமத்தில் இருந்து பெறப்படுகிறது).



முருங்கை விதையின் நன்மைகள்

உடலில் படிந்துள்ளகார்பனை வெளியேற்ற விட்டமின்B12 தேவைப்படுகிறது. முருங்கை விதை எந்த மாதிரி கார்பனாக இருந்தாலும் உடம்பில் இருந்து அரித்து வெளியேற்றுவது தான் முருங்கைவிதையின்வேலையாகும்.  உடலில் தேங்கியுள்ளகார்பனை அரித்து வெளியேற்றும்அற்றல்முருங்கைக்கு உண்டு. இரண்டு முருங்கைவிதைகளை வாயில் ஊற வைத்து மென்று சாப்பிட்டால் எப்படிப்பட்ட விடாப்பிடியானகார்பனையும் கரைத்து வெளியேற்றும்

எதிர்மறையாக கூறப்படும் பில்லி, சூனியம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளையும் நிவர்த்தி செய்யும். எதையும் முறித்து வெளியேற்றும் ஆற்றல் முருங்கைக்கு உண்டு. எந்த ஒரு எதிர்மறையானசக்தியையும் வயிற்றில் தங்க விடாது. உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடியபிராண சக்தி சார்ந்த எதையும் வயிற்றிலிருந்து நீக்கி விடும்

 ஒவ்வொரு காயிலும் ஒவ்வொரு ஊட்டச்சத்து உண்டு. முருங்கையில் மட்டும் தான் அனைத்து வித ஊட்டச்சத்துகளும் (விட்டமின்கள், மினரல்) அடங்கியுள்ளது. இந்த முருங்கைவிதையில் மூன்று வித சுவைகள்அடங்கியுள்ளன.

 

1. துவர்ப்பு

2. கசப்பு

3. இனிப்பு.

நாம் முற்றிய முருங்கைவிதையை வாயில் சுவைக்கும்போது

கசப்பு சுவை அதிகமாக உணர்ந்தால் .. வயிற்றில் பூச்சி

துவர்ப்பு சுவை அதிகமாக உணர்ந்தால் .. இரத்த ஓட்டம் குறைவு

இனிப்பு சுவை அதிகமாக உணர்ந்தால் .. தசைகள் பலவீனம்

 யாருக்கு இந்த மூன்று சீவைகளும் சமமாக இருக்கின்றதோ உடல் சமநிலையில் உள்ளதாக அர்த்தம்.

முருங்கைவிதையை சாப்பிட்ட உடனே குடலில்தேங்கியிருக்கும் எந்தவிதமான வாயுவாக இருந்தாலும் வெளியேறி விடும்.

தேவையற்ற உணவுகளைகொடுப்பதன் மூலம் குழந்தைகளின் கீழ் சுவாசம் பாதிப்பினால்குடலில்பூச்சிகள் தோன்றும். இந்த முருங்கைவிதையை உடைத்து தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை கொடுக்கும் போது குடல் சுத்தமாகும்.

மலச்சிக்கலால் ஏற்படும் தலைவலிக்கு நல்ல பலன் உண்டு

   உட்கார்ந்து கொண்டே தூங்குதல், அதிகமாக கொட்டாவி விடுதலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

கண்ணாடியில்லாமல்படிக்கக்கூடிய அளவிற்கு முன்னேற்றம் ஏற்படும்.

கிருமிகள் இல்லாமல் ஒருவருக்கு உடலில் அரிப்பு வராது. உடலில் சேரும் நுண்ணுயிர்கள்மூலமாகத் தான் உடலில் அரிப்பு ஏற்படும். அந்த நுண்ணுயிர்களை உடலில் இருந்து நீக்குவதற்குமுருங்கை விதை உதவுகின்றது.

 இந்த நுண்ணுயிர்கள் காதில் காணப்பட்டால் காதுகளில் அரிப்பு ஏற்படும்.

மூக்கிலும் அரிப்பு ஏற்படும். பெரும்பாலும் குழந்தைகள் மலவாயினை சொரிந்து கொண்டு இருப்பார்கள். இதற்கு காரணம் குடலில் உள்ள நுண்ணுயிர்கள்.

வாய் பற்கள் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டாலும் சரி செய்யும்.

ஆஸ்த்மா, மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகளுக்குமுருங்கை விதை நல்லது. குளிர்காலத்தில் ஏற்படும் மூச்சு திணறலுக்குகொத்தவரங்காயுடன்முருங்கைவிதையும் சேர்த்து எடுப்பது நல்லது.

முருங்கை விதை குடலை சுத்தம் செய்வதால் கீழ் சுவாசம் நன்றாக நடைபெறும்.

முருங்கைவிதையை அளவிற்கு மீறி அதிகமாக எடுத்தால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

முருங்கைவிதையை தினசரி எடுத்தால் குடல் சுத்தமாகும். பேதி மருந்து எடுக்க வேண்டிய அவசியமில்லை.

 சாப்பிட்டால் மயக்கம் ஏற்படும் நிலைக்கு நல்லது.

 உடலில் ஆக்சிஜன் ஒரு அழுத்த உணர்வினை ஏற்படுத்தும். இந்த அழுத்தம் குறைந்து விட்டால் சிறுநீர் விட்டு விட்டுவெளியேறும்.இதற்கு நல்ல பலன் உண்டு. சிறுநீரக செயல் இழப்பிற்கு சிறந்த பலனைக் கொடுக்கும். சிறுநீரில் உள்ள CREATININE அளவினை கட்டுப்படுத்தும். சிறுநீரின்அளவினைஅதிகபடுத்தும். (GFR – GLOMERULUS FILTER RATIO )

 

 உடலில் கார்பன்கழிவைவெளியேற்றும் “மலமிளக்கி”யாகசெயற்படும்

 

நன்றி :காய்கறி மருத்துவமனை (கருத்துகள்)

தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி

9486072414(Whatsup, telegram)


 சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு

 பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்....

Telegram:

https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3CrTLiCTA


பிரண்டை தொக்கு


பிரண்டை தொக்கு செய்முறை:

இயற்கையாக விளைந்த பிரண்டை உடைய கொழுந்து, மரசெக்குநல்லெண்ணைய்,மலைப்பூண்டு,உப்பு, கடுகு,மலைபுளி, வெந்தயம்,நாட்டு மிளகாய் கொண்டு இரும்பு சட்டியில் செய்த பிரண்டை தொக்கு மற்றும் ஊறுகாய் ஆடரின் பெயரில் குறைந்த அளவோ அல்லது மொத்தாகவோ கிடைக்கும்.

 


ஆகஸ்ட்,செப்டம்பர்,அக்டோபர்,நவம்பர்,டிசம்பர் வரை அதிக அளவு அல்லது கிடைக்கும், அதன் பிறகு பிரண்டை தளிர் விடாது அதனால் செய்வது கடினம் .

இதுபோல் வல்லாரை தொக்கு மற்றும் நார்தை ஊறுகாய்யும் கிடைக்கும்.

 

தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி

9486072414(Whatsup, telegram)


 சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு

    பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்....

Telegram:

https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3CrTLiCTA

நாட்டுமாடு விபூதி

தயாரிக்கும் முறை;அருகம்புல்லும் சேர்த்து உண்ட நாட்டு பசுவின் சணத்தைஉருண்டைகளாகஉருட்டிகாயவைத்து, நெல் உமி கொண்டு கவசம் இட்டு பிறகு புடம் போட்டு நன்றாக வெந்தவுடன்எடுப்பது தான் தயாரிப்பு முறை ஆகும்


பாரம்பரியமான முறையில் நாட்டுபசுவின்சாணத்தில்கோசாலை மூலம் செய்யப்பட்ட விபூதி கிடைக்கும்.

சுத்தமான நாட்டுமாடுவிபூதியைபூசுவதால் எதிர்மறை எண்ணம் மறையும்.

பிரபஞ்சசக்தியை முழுமையாக உள்வாங்கும்.



இந்த விபூதியை நீரில் குழைத்துஅடிப்பட்டவீக்கம்,மூட்டுவலி,முகப்பரு போன்ற இடதில்பூச குணம் கிடைக்கும்.

கிருமி நாசினியாகசெயல்படுகிறது.

 

தேவைப்படுவோர்அணுகவும்

 சதுரகிரி இயற்கை அங்காடி

9486072414(Whatsup, telegram)

 

சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு

 பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்....

Telegram:

https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3CrTLiCTA


பாரம்பரிய விளக்கெண்ணெய் தயாரிக்கப்படும் முறை-2

 


விளக்கெண்ணெய் தயாரிக்கப்படும் முறை:.நன்றாக முற்றிய ஆமணக்கு விதைகளை வெயிலில் உலர்த்தி இரண்டு பங்கு நீர் சேர்த்து நன்றாக வேகவைத்து பிறகு நீரை வடிகட்டி மூன்று நாட்கள் காலை முதல் மாலை வரை வெயிலில் காய வைக்க வேண்டும். அவற்றை உரலில் இட்டு நன்கு இடிக்கவேண்டும். அது கிட்டத்தட்ட பசை போல இருக்கும். பின்னர் பானை ஒன்றில் ஒரு பங்கு விதைக்கு இரண்டு பங்கு தண்ணீர் அல்லது விட்டு அடுப்பில் வைத்துக் கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த நீரில் இடித்துவைத்துள்ள ஆமணக்கைக் கொட்டிக் கிளர வேண்டும். அடுப்பை நிதானமாக எரிய விட வேண்டும். நீர் பாதியாக வற்றியதும் வடிகட்டி எடுக்கவும்.ஒரு பாட்டிலில் ஊற்ற நீர் கீழும் எண்ணைய் மேலும் மிதக்கும். இப்போது எண்ணெயை மட்டும் சேகரிக்க வேண்டும் சேகரித்த எண்ணெயுடன் நீர்த்துளிகள் கலந்து இருக்கும். எனவே எண்ணெயை வாணலியில் விட்டுச் சூடாக்க வேண்டும். சலசல என்ற சத்தத்துடன் நீர் மெல்லமெல்ல வற்றும். நீர் முழுவதுமாக வற்றிபின் சத்தம் அடங்கிவிடும். இப்போது எண்ணெயை ஆற வைத்து வடிகட்டி எடுப்பது நாம் பாட்டி காலத்து முறை. எண்ணைய் தயாரிக்க பயன்படுத்த வேண்டிய பாத்திரங்கள்:ஈயம்,செம்பு,பித்தளை,மண் பாத்திரம்


எண்ணைய் தயாரிக்க பயன்படுத்த கூடாத பாத்திரங்கள்:அலுமினியம்,பிளாஸ்டிக்

எண்னைய் சேகரித்து வைக்க வேண்டிய பாத்திரங்கள்:கண்ணாடி,காரணம்எண்னெய்யின்தன்மையைமாற்றாது.

 உடலில் எந்த பகுதியில் வீக்கம் இருந்தாலுமதை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

 பருப்பு எளிமையாக வேக மற்றும் செரிமானம் சிறப்பாக நடக்க காலம் காலமாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்

 அடிபட்ட புண்களைஆற்றவும், பல்வேறு நரம்பு மூட்டுவலிகளுக்கானமூலிகைத் தைலம் காய்ச்சவும் அதன் அடிப்படைத்தைலமாகப் பயன்படுகிறது

 தலைமுடிக்குஅடிக்கடிப் பயன்படுத்தி வந்தால், தலையில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், தலைமுடி வறட்சியின்றி மென்மையாக  இருக்கும்.மேலும் பொடுகு தொல்லை குணமாகும்.

 பருப்பைஅரைத்து, பசையாக்கி, கட்டிகளின் மீது பூசிவரகட்டிகள்உடையும் அல்லது அப்படியே அமுங்கும்.

 சுகபேதிக்கு நாம் பலதலைமுறைகளாக பயன்படுத்தி வந்தது விளக்கெண்ணெய் தான் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

 உடலுக்கு சூட்டை நீக்கி குளிர்ச்சியைத் தரும் ஆற்றல் விளக்கெண்ணெய்க்கு உண்டு. இதனால் சிறு குழந்தைகளின் தலையில் விளக்கெண்ணெயைத்தடவுவர். வெயிலில் அதிக நேரம் நடந்து சென்றாலோ, நின்று பணியாற்றினாலோ ஏற்படும் சூட்டைத் தணிக்க உள்ளங்காலில்விளக்கெண்ணெயைத்தடவிக்கொண்டுஉறங்குவர். சூட்டினால் ஏற்படும் வயிற்று வலியைப் போக்க அடிவயிற்றில் விளக்கெண்ணெயைத்தடவுவர்.

  குளிர் காலத்தில் காலில் ஏற்படும் வெடிப்புக்குவிளக்கெண்ணெயைசூடாக்கி, அதில் மஞ்சள் பொடி சேர்த்து, அந்த விழுதை வெடிப்பு ஏற்பட்ட இடங்களில் தடவி வர சில நாட்களில் சரியாகும்.

 கண்கள் சிவந்திருந்தால், மங்களான பார்வைக்கு சுத்தமான விளக்கெண்ணெய் ஒரு துளியைஇரவில் கண்களில் விட்டு உறங்க குணம் கிடைக்கும்

 விளக்கெண்ணெய் உடன் சம அளவு  தேங்காய் எண்ணேய் கலந்து தினமும் தேய்க்க  தலையில் முடி வளர்ச்சியைத் தடை செய்யக்கூடிய செதில்கள் வராமல் பாதுகாப்பதுடன் அடர்த்தியாக வளரத் தொடங்கும். 

 

தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி

9486072414(Whatsup, telegram)

 

சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு

  பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்....

 Telegram:

 https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3CrTLiCTA