இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

ரச லிங்கம் வழிபாடு:


ரசமணிக்கு எவ்வளவு பலன்கள் கிடைக்குமோ அதைவிட பலகோடி மடங்கு பலன் தரும் பாதரச லிங்கம்.வீட்டிலோ அல்லது வியாபரம் செய்யும் இடத்தில் வைத்து தினமும் பூஜித்து வந்தால் சகலவிதமான காரிய தடைகளும் நீங்கும்,ஏவல்,பில்லி,சூனியம் போன்ற எந்த விதமான மந்திர தந்திர வித்தைகளும் பலிக்காது.வியாபாரம் செழித்து வளம் பெரும்.போட்டி பொறாமை அகன்று நேர் வழியில் பயணிக்க வைப்பதில் ரச லிங்க வழிப்பாடு மிகவும் சக்தி வாய்த்த ஒன்றாகும்.






தற்போது ரச லிங்க வழிப்பாடு என்பது மிகவும் அரிதாகிவிட்டது,காரணம்,முதலில் பயன் பற்றிய அறியாமை,விலை அதிகம்,கிடைப்பதில்லை அப்படியே கிடைத்தாலும் அது உண்மையான ரச லிங்கமா என்ற ஒரு சந்தேகம் உள்ளது ,ஏன் என்றால் தப்போது கிடைக்கும் ரச லிங்கங்கள் அனைத்தும் வெள்ளியம் மற்றும் பாதரசத்தை சுத்தி செய்யாமல் ஒன்றாக உருக்கி செய்யப்பட்ட லிங்கமாகவே கிடைக்கிறது.மேலும் தெய்விக சக்திக்கு பயந்து உண்மையான ரச லிங்கம் மற்றும் ரச மணி செய்யும் ஆசான்கள் வெகு சிலரே தற்போது உள்ளனர்,

அப்படிப்பட்ட 86 வயதுடைய ஆசான் ஒருவரை சந்தித்த போது அவர் கூறிய தகவல் தம்பி ,எனக்கு எழுத படிக்க தெரியாது ,குருகிட்ட கத்துகிட்டதுதான் நான் ரச லிங்கம் செய்ய ஆரம்பிச்ச காலத்துல இருந்தே வட நாட்டு ஜோசியகரங்க தான் அதிகமாக வந்து வாங்கிட்டு போவானுங்க எங்கிட்ட அடிமாட்டு விலைக்கு வாங்கிட்டு போய் 60 ஆயிரம் முதல் இலட்ச கணக்கு வரை விலை வைத்து விற்ப்பார்கள்,நம்ம ஊரு ஜோசியகரனுங்க வடநாட்டுல இருந்து வாங்கிட்டு வந்து (நம்ம ஆளுங்க செய்து அனுப்பிய) இங்க ஒரு காலத்து வித்தாங்க

லிங்கத்துக்கு உங்களோட ஆத்மார்த்தமான வழிபாடுதான் மிகுந்த சத்தியை தரும்,வேறு ஏதும் தேவை இல்லை ,நான் செய்து கொடுத்த காலத்தில் ரச லிங்க வழிப்பாடு செய்யும் நபர்களுக்கு பின்ன அவங்க வீட்டுல தொழில் செய்ற இடத்தில யாரவது ஏவல்,பில்லி ,சூனியம் போன்ற எந்த மந்திர தந்திர கட்டுகளும் செய்ய முடியாது,செய்தாலும் பலிக்காது ,அப்படி பலிச்சதுனா நான் ரச லிங்கம் செய்றத நிறுத்திடுவேன் ,சொந்த செலவில் நானே கட்டை எடுத்து விடுவேன் என்று சொல்லித்தான் செய்துதருவேன் என்றார்,

அவரு ஜனாதிபதி (ராசலிங்கம்),அவருகிட்ட இது கிடைக்குமா அது கிடைக்குமா என்று கேட்காமல் வழிப்பாடு மாட்டும் தீவிரமாக செய்ங்க மற்றது எல்லாம் அவரு பாத்துக்கொள்வார் என்று கூறினார்   
     
மேலும் பல்வேறு பிரச்னைகளுக்கும் ரச லிங்க வழிபாடு கொண்டே சரிசெய்யலாம்: 
1.கணவன் மனைவி இடையில் ஏற்படும்,வீண் சண்டைகளை தவித்து குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

2.வியாபாரம் மற்றும் தொழில் உயர்வு போன்றவற்றை சிறந்த முறையில் ஏற்ப்படுத்தி தரும். 

3.எந்த ஒரு கெட்ட சக்தியும் பலிக்காது ,ஏவியவரை உடனே தாக்கும்.செய்வினை ,ஏவல் ,பில்லி,சூன்யம் போன்ற கெட்ட சக்திகளில் இருந்து பாதுகாக்கவும்,இவற்றின் பாதிப்புகளை அகற்றவும்.

4.எதிரிகள் தொல்லை மற்றும் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட வைக்கும்.

5.நவ கிரகங்களையும் கட்டுபடுத்தும் பண்பு ரச லிங்கத்துக்கு  உண்டு என்பதால் ,எல்லாவிதமான ஜாதக தடைகளையும் கலைந்து அதிரடியான மாற்றத்தை உணரலாம்..

6.காரியசித்திவாக்கு பலிதம் போன்றவறை எளிதாக அடையலாம்.

7.சகலவிதமான நல்ல காரியங்களும் நடக்கும்.  

8.திருமண தடையை நீக்கும்.

9.வேலைவாய்ப்புக்கான தடையை நீக்கி நல்ல வாய்ப்பை உருவாக்கி தரும்

10.இடி,மின்னல்,புயல்,கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கை அழிவுகளில் இருந்து பாதுகாக்கும்,அணித்து இருப்போரை எதுவும் அண்டாது.

11.ஜோதிடர் ,எண் கணிதர் ,குறியாடி ,பிரசன்னம் பார்ப்போர் இவர்களின் வாக்கு வன்மையை அதிகரிக்க செய்யும் ,மேலும் காரிய சித்தி ,வாக்கு பலித்தல் எளிதில் கிடைக்கும்.

12.வாகனங்களில் போகும் போது ஏற்படும் விபத்துகளை தடுக்க வல்லது,நம்முடைய விழுப்புணர்வை அதிகப்படுத்தும்.

13.குழந்தைகளுக்கு ஏற்படும் சகலவிதமான பிரச்சினைகளை வரவிடாமல் பாதுகாப்பு அரண் போல் இருந்து காக்கும்.

இதுபோன்ற எண்ணற்ற ஆற்றல்களை அள்ளித்தரும்.
மேலே கூறிய தகவல்கள் அனைத்தும் சித்தர்கள் பாடலில் இருந்து (போகர் 7000,700 மற்றும் பிற நூல்கள்) எடுக்கப்பட்டது ,மேலும் அனுபவம் வாய்ந்த சித்த வைத்தியர்கள்,தற்போது ரசமணி & ரச லிங்கம் உபயோகப்படுத்தும் நண்பர்கள் ,ரசமணி & ரச லிங்கம் செய்வதில் அனுபவம் வாய்ந்த நண்பர்கள் கூறிய தகவல்களில் இருந்து அரை சதவிதம் அதிலும் குறைந்த அளவு மட்டுமே இங்கு கொடுக்கப்பட்டு உள்ளது.காரணம் தக்க குரு மூலம் சரியான வழியில் செய்யவும்,நல்ல எண்ணங்களும் வேண்டும் குறிப்பாக குரு அருளும் திரு அருளும் இல்லாமல் ரசமணியை & ரச லிங்கம் செய்யவோ உபயோகிக்கவோ முடியாது.

 “விதியாளி காண்வான் பாரு”

        என்ற சித்தர்களின் கூற்றுப்படி விதி உள்ளவர்களுக்கு மட்டுமே ரசமணி  & ரச லிங்கம் வந்து அமையும் மேலும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்க முடியும்.

உண்மையான ரசலிங்கம் என்றால் நம்முடைய வீட்டில் வைத்து வழிப்பாடு தொடங்கியது முதல் மாற்றம் தரும்.

மேலும் விவரங்களுக்கு-----http://sathuragiriangadi.blogspot.in

1.Sathuragiri Herbal Research Center (https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl)


-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு
சதுரகிரி அழகேசன்-94860 72414,96599 68751
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com


4 கருத்துகள்:

  1. ஐயா நான் காசியில் இருந்து பாதரசலிங்கம் சிறியது வாங்கி வந்து வீட்டில் வைத்து பூஜித்து வருகிறேன். அவை அசல் பாதரசலிங்கம் தான் என்று எப்படி அறிவது

    பதிலளிநீக்கு
  2. அசல் பாதரச லிங்கம் என எப்படி அறிவது

    பதிலளிநீக்கு
  3. அசல் ரசமணி வேண்டும் விலை எவ்வளவு?

    பதிலளிநீக்கு