இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 17 நவம்பர், 2017

கருமஞ்சள்

மஞ்சள் குடும்பத்தை சார்ந்த ரகம்,இதில் மற்ற ரகத்தைவிட அதிகப்படியான “குக்குமின்” என்ற பொருள் உள்ளது, இது புற்றுநோயை குணப்படுத்துவதில் முக்கிய பங்குவகிக்கிறது.

மேலும் ஐந்து சொட்டு சாறு தினமும் ஓரு கிளாசு நீரில் கலந்து அருந்த நோய் எதிர்ப்பு சத்தி அதிகரிக்கும்.

கருமஞ்சள் பொடியை ஒரு சிட்டிகை எடுத்து விரல் கொண்டு பல் துலக்க பல் ஈறுவீக்கம் ரத்த கசிவு போன்ற பிரச்சனைகள் உடனடியாக நீங்கும்.
ஆறாத புண்களுக்கு கருமஞ்சள் சாறு அல்லது பொடி ஒரு சிறந்த நிவாரனி,உடனடியாக ஆற்ற வைக்கிறது...




ஒரு ஸ்பூன் பொடி அல்லது பசையாக அரைத்து முகத்தில் தடவி காயும் முன்பு கழுவ வேண்டும் இவ்வாறு தொடர்ச்சியாக 28:நாட்கள் செய்ய கருந்திட்டு ,கரும்புள்ளி போன்றவை மறைந்து நல்ல பொழிவும் ,வனப்பும் கிட்டும்.

கால் ஸ்பூன் சாறு எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் அருந்த நுரையீரல் பலப்படுத்தும், ஆஸ்துமா பிரச்சினையை களையும்.

ரூமேட்டிக் மூட்டுவலி(மூட்டுகள் மற்றும் எலும்புகள் இணையும் பகுதியில் உள்ள வீக்கம் ) அகல பச்சை கருமஞ்சலை அரைத்து பற்று போட குணமாக்கும்.
தடைபட்ட மாதவிலக்கு மற்றும் சீரற்ற மாதவிலக்கு,அல்சர்,மூலம் ஆகியவற்றிக்கு வெண்ணையில் அரைத்து காலை மாலை வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் அருந்த நல்ல தீர்வு கிடைக்கிறது......

இவ்வளவு சிறப்புகள. கொண்ட கருமஞ்சள் தற்போது மருந்தாக அதிகமாக உபயோகிப்பது இல்லை,

காரணம்.இந்த மஞ்சளில் காளி மற்றும் கால பைரவர் வசம் செய்வதால் தொழில் வசியம் தன வசியம் ,பண வரவு போன்ற விசயங்களுக்கு உபயோகம் செய்கினர்.ஏழரை சனி வசம் உள்ளவர்கள் இதை வைத்து கொண்டால் தாக்கம் குறையும், நெற்றியில் திலகமிட்டு கொண்டால் காரியம் ஜெயமாகும் என்று ஜோதிடரகள் அதிக அளவில் உபயோகப்படுத்தி வருகின்றனர்..
மேலும் விவரங்களுக்கு-----http://sathuragiriangadi.blogspot.in

1.Sathuragiri Angadi-----      https://www.facebook.com/sathuragiriangadi/

2.@sathuragiriiyarkaiangadi----- https://www.facebook.com/sathuragiriiyarkaiangadi/
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு

சதுரகிரி அழகேசன்-94860 72414(whatsApp),
96599 68751

Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
.......................................................................................................

வெள்ளி, 6 அக்டோபர், 2017

விஷநாராயணி மூலிகை செடி,இலைகள் கிடைக்கும்

விஷநாராயணீ இலைகளை ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து காலை,இரவு உணவுக்கு ஒரு மணி நேரம் கழித்து எடுக்கலாம்.

அல்லது பூனைமீசை இலை 15 மற்றும் விஷ நாராயணி இலை 15 எடுத்து 250 மில்லி நீரில் கலந்து 150 மில்லி ஆக காய்ச்சி வடிகட்டி காலை,மாலை வெறும் வயிற்றில் அருந்தலாம்.

இவ்வாறு எடுத்துவர உடலில். உள்ள அதிகப்படியான யூரியா,கிரியாட்டினைன் யூரிக்  ஆசிட் அளவு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பும்.

சிறுநீரக செயல் திறன் குறைவு மற்றும் சிறுநீர் வெளியேறும் பாதையில் உள்ள தொற்று ,ஆகியவற்றை சரிசெய்யும்,

டயாலிசிஸ் எண்ணிக்கையை குறைக்க உதவுகிறது.

மேலும் விவரங்களுக்கு-----http://sathuragiriangadi.blogspot.in

1.Sathuragiri Herbal Research Center----- (https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl)

2.@sathuragiriiyarkaiangadi----- https://www.facebook.com/sathuragiriiyarkaiangadi/
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு

சதுரகிரி அழகேசன்
94860 72414(whatsApp),
96599 68751

Email:sathuragiriiyarkaiangadi@gmail.com .......................................................................................................

பிரம்மமுனி ஆறுவகை சூரணம்

செய்முறை:சீரகம்,சதகுப்பை,லவங்கபூ,அதிமதுரம்,சிறுநாகப்பூ,கருஞ்சீரகம் தலா ஒரு பங்கு எடுத்து இளம். வறுப்பாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

மேலே உள்ள பொருள்களின் எடைக்கு இரு மடங்கு கொத்தமல்லி விதையை எடுத்து லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.


கொத்தமல்லி விதைக்கு இரு மடங்கு பனகற்கண்டு எடுத்து பொடி செய்து கொள்ளவும்.


இப்போது அனைத்து பொருள்களையும் ஒன்றாக கலந்து வைத்து கொள்ளவும்.

உபயோகப்படுத்தும் முறை: காலை,மாலை வெறும் வயிற்றில் ஐந்து கிராம் எடுத்து சுடுநீர் கலந்து அருந்தவும்.

பயன்கள்:
அனைத்து வகையான பித்தம் சார்ந்த நோய்களும் குணமாகும்.
வாய் முதல் மலத்துவாரம் வரை உள்ள பிரச்சனைகளை சரி செய்யும்.
உடல்சூடு,மூளை சூடு அகலும்,ஞாபக சத்தி குறைபாட்டை அகற்றி புத்துணர்ச்சியாக வைக்கிறது.
கண்நோய்கள் அகலும்.
சூட்டினால் வரும் இருமல் ,சளி தொந்தரவுகளை களையும்.

இம்மருந்தை உண்டால்,பில்லி,சூனியம்,ஏவல்,இடுமருந்து அனைத்தும் களையும் மேலும் அவற்றின் பாதிப்புகளும் இல்லாமல் போகும் என்று பிரம்ம முனி சித்தர் குறிப்பிடுகிறார்.

மேலும் விவரங்களுக்கு-----http://sathuragiriangadi.blogspot.in

1.Sathuragiri Herbal Research Center----- (https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl)

2.@sathuragiriiyarkaiangadi----- https://www.facebook.com/sathuragiriiyarkaiangadi/
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு

சதுரகிரி அழகேசன்
94860 72414(whatsApp),
96599 68751

Email:sathuragiriiyarkaiangadi@gmail.com


...........,.............................

தேன் அத்தி

நாட்டு அத்தி பழத்தை ஒரு வாரம் நிழலில் உளர்த்தி பிறகு ஒரு நாள் வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்து கொள்ளவும்.ஒரு பங்கு அத்திக்கு 3 பங்கு தேன் கலந்து கண்ணாடி பாட்டிலில் 45 முதல் 60 நாட்கள் வைத்தால் தேன் அத்தி தயாராகி விடும்.அல்லது உலர்ந்த அத்தியை பொடி செய்து இதில் ஒரு பங்குக்கு மூன்று பங்கு தேன் கலந்து வைத்து கொண்டு உபயோகப்படுத்தலாம்.

தினமும் இரவு உறங்கும் முன்பு 2 முதல் 3 வரை தேன் அத்தி பழங்களை எடுக்கலாம், அத்தி பழமாக இருந்தால் மூன்று எடுக்கலாம்

பயன்கள்:

இரத்த சோகையை(ஹீமோகுளோபின் குறைவு) உடனடியாக சரி செய்யும் தன்மை கொண்டது, நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும்.

மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு உண்டாகும்,கால்சியம் குறைபாடு ,சவ்வு தேய்மானம், எலும்பு தேய்மானம் இவற்றை வராமல் தடுக்கிறது.

தரமான விந்தணுக்களையும்,தாது பலத்தையும் உண்டாக்கும்.

மலசிக்கலை உடனடியாக களையங்கூடியது,மூலநோய்க்கு நல்ல பலன் கிடைக்கும்.

கல்லீரல் மற்றும் மண்ணீரலை வழுப்படுத்தி பலம் தருகிறது. மேலும் மது அருந்தியதால் ஏற்பட்ட பாதிப்புகளை களையும்.

மேலும் விவரங்களுக்கு-----http://sathuragiriangadi.blogspot.in

1.Sathuragiri Herbal Research Center----- (https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl)

2.@sathuragiriiyarkaiangadi----- https://www.facebook.com/sathuragiriiyarkaiangadi/
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு

சதுரகிரி அழகேசன்
94860 72414(whatsApp),
96599 68751

Email:sathuragiriiyarkaiangadi@gmail.com

இயற்கை உரம் (மண்)

தேங்காய் மட்டையை பதப்படுத்தி மேலும் மட்க வைத்து இதனோடு காடுகளில் கிடைக்கும் இலை மட்கு,வேப்பம் பிண்ணாக்கு மற்றும் இயற்கை வளர்ச்சி ஊக்கிகளை கலந்து சில காலம் மக்க வைத்து பிறகு பிஸ்கட் வடிவில் அச்சிட்டு தயாரிக்கப்பட்டது தான் இயற்கை உரம்(மண்)

இதனை மரம்,செடி,கொடிகளுக்கு உரமாகவோ அல்லது மண்ணாகவோ பயன்படுத்தலாம்.

அனைத்து வகையான விதைகளையும் இதில் வைத்து வளர்க்கலாம்,விதை முளைப்பு விகிதாச்சாரம் மிக மிக அதிகம்.

மாடி தோட்டம் மற்றும் தொட்டிகளில் தாவரங்களை வளர்க்க ஏற்ற மிக சிறந்த மண் ஆகவும்,உரமாகவும் பயன்படுகிறது.

ஆறுமாதங்கள் வரை உரம் தேவை இருக்காது,அதன்பிறகு  ஒரு கைபிடி மக்கிய ஆட்டு சானம் அல்லது மாட்டு சானம்  போட்டால்  போதுமானது அடுத்த ஆறு மாதம் வரை போதுமானது.

ஒருமுறை நீர் விட்டால் 7 முதல் 15 நாட்கள் வரை நீர் தேவை இருப்பது இல்லை.

       பொதுவாக இயற்கை முறையில் விதை வளர்ப்பு, மாடி தோட்டத்திற்கு மிகவும் எளிமையானதும் பாதுகாப்பனதுமாக விளங்குகிறது.....

இந்த இயற்கை மண் (உரத்தில்) சிறப்பான விஷயம் என்னவென்றால் இதில் உள்ள மின் சத்தியை  நடுநிலையாக்கி(நியூட்ரலைஸ்) செய்த பிறகுதான் மக்க வைத்து தயாரிக்கப்படுகிறது, எனவே வளர்ச்சி குறைபாடு, தாவரங்கள் கருகி போகும் நிலை போன்ற குறைபாடுகள் இதில் வராது.

மேலும் விவரங்களுக்கு-----http://sathuragiriangadi.blogspot.in

1.Sathuragiri Herbal Research Center----- (https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl)

2.@sathuragiriiyarkaiangadi----- https://www.facebook.com/sathuragiriiyarkaiangadi/
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு

சதுரகிரி அழகேசன்
94860 72414(whatsApp),
96599 68751

Email:sathuragiriiyarkaiangadi@gmail.com

.......................................................................................................

சனி, 4 பிப்ரவரி, 2017

நாட்டு மாடு சாணம் ,வரட்டி,கோமியம்,பால்,நெய்,விபூதி,பஞ்சகவியம்,சாண பொடி,போன்ற பொருள்கள் கிடைக்கும்,


தமிழக கேரளா எல்லை ஓர பகுதியில் அமைந்துள்ள மலை அடிவாரத்தில் உள்ள மலைவாழ் மக்களின் நாட்டு மாடுகளில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருள்களும் கிடைக்கும்,






மாடுகளுக்கு உணவுகள் 100 % மலை பகுதி மற்றும் மலை அடிவாரத்தில் உள்ள மூலிகை தாவரங்கள் மட்டுமே,

அனைத்து வகையான மூலிகை சத்துக்களையும் கொண்டுள்ள இந்த சாணத்தை வைத்து வீடு மொழுகுதல்,வரட்டி கொண்டு புகை போடுதல் சிறந்த பலனை தரும்,

மாட்டின் பால் மற்றும் நெய் நல்ல மூலிகை மணமாகவும் ருசியாகவும் உள்ளது.

சாணத்தின் மூலம் தயாரிக்கப்படும் சாண பொடி மற்றும் விபூதி கொண்டு நீர் கலந்து வீட்டுக்குள் மற்றும் வெளியே தெளிப்பதின் வழியாக கெட்ட கிருமிகள் வராமலும் இருந்தால் அழிக்கவும் செய்யும்.எதிமறை சக்தியை வீடுகளுக்குள் தங்க விடாது.

கோமியத்தையும் இதே போல் செய்து நல்ல பலனை பெறலாம்.
பொதுவாக அருகில் உள்ள நாட்டு மாடுகள் வளர்ப்பவர்களிடம் இந்த மாதிரியான பொருள்களை வாங்கி பயன் பெறவும்,இதன் மூலம் மாடுகளும் வளர்ப்பவரும்,உபயோகிப்பவரும் மிகசிறப்பாக பலன் பெறலாம் என்பதில் சந்தேகமில்லை,       
மேலும் விவரங்களுக்கு
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு
சதுரகிரி அழகேசன்-94860 72414,96599 68751
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com 

.......................................................................................................
நன்றி :திரு கண்ணன் அவர்கள்               

சனி, 28 ஜனவரி, 2017

விளாம்பழ ஜாம்


தானாக விழுந்த விளம்பழதின் ஓட்டை நீங்கி உள்ளே உள்ள பழ சுளை ஒரு கிலோ அளவுவுக்கு ஒரு கிலோ நாட்டு சர்க்கரை ,100 கிராம் இந்துப்பு ,50 கிராம் வர மிளகாய்த்தூள் அல்லது மிளகுத்தூள்,எலுமிச்சை பழசாறு 5 ஸ்பூன்,இஞ்சி சாறு 5 ஸ்பூன் எடுத்து ,நன்றாக பிசைந்து வைத்து கொள்ளவும்,அல்சர் மற்றும் மூலம் உள்ளவர்கள் மட்டும் வர மிளகாய்த்தூள் அல்லது மிளகுத்தூள் இவற்றை தவிர்க்கவும்.

தினமும் காலையில் மூன்று ஸ்பூன் மாலை மூன்று ஸ்பூன் அளவு எடுத்து உண்ணலாம் ,அல்லது விருப்பப்படுபோது ஒரு ஸ்பூன் அளவு உண்ணலாம்.

இவ்வாறு செய்ய இயலாதவர்கள் தினமும் காலை மாலை இருவேளைகளில் ஒரு பழம் என்ற கணக்கில் உண்ணலாம்.

இவ்வாறு உண்ணும் பழத்தின் பலன்கள் அளப்பரியது சோதித்து பார்த்ததில் கிடைத்த பழங்கள் உங்களுக்கு தருகிறோம்,

நாவில் ருசி அறிய நிலை,அதிகபடியான உமிழ்நீர் சுரத்தல் ,தொண்டை புண் நா வரட்சி,வாய் கசப்பு ஆகியவற்றை நீக்கும்,தலை சுத்தல் நீக்கும்.மலசிக்கலை நீக்கும், வாயுத்தொல்லையை அகற்றும்.

உடளுக்கு  குளிர்ச்சி தருகிறது,மூல நோயை ,கட்டுப்படுத்தும் ,வராமல் தடுக்கும்,வயிறு புண்ணை ஆற்றும்,அஜீரண கோளாறுகளை சரியாக்கி ,நன்றாக பசி எடுக்க வைக்கும்,

40 வயதை கடந்தவர்களுக்கு எலும்பு மற்றும் பல் இவற்றை உறுதியாக வைக்கிறது,மேலும் அவர்களுக்கு வரும் மறதி ,மன கலக்கம், இவற்றை களைய செய்து உடலுக்கு சக்தி அளித்து புத்துணர்வாக வைக்கிறது,

பித்தத்தை தணிப்பதில் மிகசிறப்பாக வேலைசெய்கிறது ,

மேலும் இதன் பொது பலன்கள் உங்களுக்காக

கண் பார்வை சக்தியை அதிகரிக்கும்.
வாதம்,பித்தம்,குட்டம்,இளநரை,தொண்டை புண்,
கல்லீரல் மற்றும் இதயத்தை பலப்படுத்தும்,
இரத்ததில் உள்ள கிருமிகளை அழிக்கும் ,மேலும் ரத்தத்தை சுத்தமாக்கும்,புது இரத்தத்தை உற்பத்தி செய்ய வைக்கும், இரத்த சோகையை நீக்கும். இரத்த அழுத்தத்தை இயல்பாக வைக்கும்.

மேலும் விவரங்களுக்கு

1.Sathuragiri Herbal Research Center (https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl)

2.SathuragiriIyarkaiAngadi (https:// www.facebook.com/profile.php?id=100009101367650)

-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு
சதுரகிரி அழகேசன்-94860 72414,96599 68751
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
.......................................................................................................
நன்றி :திரு கண்ணன் அவர்கள்
......................................................................................................

வெள்ளி, 27 ஜனவரி, 2017

தேன் வில்வம்


நன்கு பழுத்து விழும் வில்வ பழங்களை எடுத்து அதன் ஓடு நீக்கி உள்ளே உள்ள பழ சுளைக்கு இருமடங்களவு தேன் எடுத்து வைத்து கொள்ளவும்.
முதலில் தேனை நன்றாக காய்ச்சவும்,பிறகு எடுத்து வைத்துள்ள வில்வ பழ சுளைகளை அதனுள் போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும் ,பின்பு அடுப்பை அனைத்து நன்றாக கிளறவும்,பிறகு சூடு ஆறியதும் ஒரு பெரிய கண்ணாடி பாட்டிலில் போட்டு பாட்டிலின் வாயை வெள்ளை துணி கொண்டு கட்டவும் ,இதனை நீர் சுண்டும் வரை தினமும் சூரிய ஒளியில் வைக்கவும்.பிறகு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்,தினமும் காலை, மாலை வெறும் வயிற்றில் இரண்டு ஸ்பூன் எடுத்து சாப்பிடவும்.

அனைத்து வகையான செரிமான கோளாறுகளையும் சரி செய்யும்(வயிற்று போக்கு,சீதபேதி ,வாயு தொல்லை ,புண், கான்செர்,தாமதமான ஜீரணம்)
தோல் மற்றும் முடியை பளபளப்பாகவும்,மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது,

உடல் எடையை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது,தசைகள் மற்றும் இதயம்,ரத்த குழாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்ய உதவும்,இதன் மூலம் இதய அடைப்பு வராமல் தடுக்கலாம்,

விந்து நஷ்டத்தை நீக்கி ஆண்மையை அதிகரிக்க செய்யும்,மேலும் சிறுநீரகத்தில் கற்கள் வராமல் தடுக்கும்,  

மனசோர்வு ,மன அழுத்தம் இவற்றை நீக்கும் காரணிகள் இதில் அதிகம் உண்டு .


கல்லீரல் ,மண்ணீரல் ,இரப்பை,குடல் இவற்றில் ஏற்படும் பலவினதால் உண்டாகும் நோய்களை களையும்,

உடல் உள் உறுப்புகளில் சேர்ந்துள்ள நச்சு கழிவுகளை வெளியேற்றி அவற்றுக்கு சத்தி அளித்து வலுப்படுத்தும்,

பூஞ்சை ,வைரஸ் இவற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது,
வைட்டமின் C குறைவால் உருவாகும் ஸ்கர்வி நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது,

இன்சுலினை சமநிலைபடுத்தும் கரணிகளை கொண்டுள்ளது,

நுரையீரளை பலப்படுத்தி நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க செய்வதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது,(ஆஸ்துமா,சளி,இருமல்,கபம்,மற்றும் நெஞ்சில் பாரம் சேர்ந்துள்ளது போன்ற உணர்வை களையும்) மேலும் குறட்டை ,முறையற்ற சுவாசத்தை சீராக்கும்.

மூல நோயை கட்டுபடுத்தும் /வராமலும் தடுக்கும்.

இவ்வளவு சிறப்புகளை இந்த வில்வ பழம் கொண்டு இருந்தாலும் இதை சாப்பிட சில கட்டுப்பாடுகள் உள்ளது அவை,

1.வெறும் வயீற்றில் மட்டுமே சாப்பிட வேண்டும்.
2.ஒரு முறை 50 கிராம் வரை மட்டும் எடுக்கலாம்,அதிகப்படியாக எடுப்பது வயீற்று போக்கை உண்டாக்கும்.
3.கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டும்,

பொதுவாக வில்வத்தின் பழம் ஒரு கால்பகுதி ,ஒரு கால் பகுதி பழத்தில் செய்த பழ சாறு,இலை என்றால் 5 எண்ணிக்கை,இலை சாறு எனில் 15 இலையை கொண்டு நீர் விட்டு அரைத்து வடிகட்டி அருந்தவும்,வில்வ இலை பொடி என்றால் 5 கிராம் எடுத்து ஒரு கிளாசு சூடு நீரில் கலந்து அருத்தலாம்.

ஒரு நாளைக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ செய்யலாம்.மேல் கூறிய அனைத்து பலன்களும் கிடைக்கும்.




மேலும் விவரங்களுக்கு
1.Sathuragiri Herbal Research Center (https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl)
)
தொடர்புக்கு
சதுரகிரி அழகேசன்-94860 72414,96599 68751
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
.......................................................................................................
நன்றி :திரு கண்ணன் அவர்கள்,புகைப்படம்:shivayam54.blogspot
....................................................................................................