இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 17 டிசம்பர், 2013

தண்ணீர்விட்டான் கிழங்கு எனப்படும் நீலாவரிக்கிழங்கு.



உலகில் எத்தனை வகை மூலிகைகள் கிடைத்தாலும் அவை நம் பாரம்பரிய தமிழகத்தில் சித்தர்கள் உறையும் மலைகளில் அவர்களின் அருந்தவப்பணிகளால் நமக்கு கிடைக்கப்பெறும் உயரிய குணங்கள் கொண்ட சிவனருட் கொண்ட மூலிகைகள் போலாவதில்லை. இதற்கு எத்தனை உதாரணங்கள் வேண்டுமானாலும் கூறலாம், ஆயினும் ஒரே ஒரு உதாரணம் மட்டும் போதும், அது தான் உலக மாந்தர் அனைவரையும் உய்விக்கக் கிடைத்த மாமருத்துவ குண நலன் கொண்ட தண்ணீர்விட்டான் கிழங்கு எனப்படும் நீலாவரிக்கிழங்கு.
தண்ணீர்விட்டான் கிழங்கின் அருமை தனை சுருக்கமாக ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில், மனிதர் தம் நோய் யாவும் தீர்க்க வந்த சர்வ ரோக நிவாரணி, தண்ணீர் விட்டான் கிழங்கு!

அள்ள அள்ளக் குறையாத மகாமேரு போன்ற அவர்தம் சித்த வைத்தியக்குறிப்புகளில் பிரதான இடம் பிடிப்பது மனிதனின் தேக ஆரோக்கியம் பற்றிய வைத்திய முறைகள் தான்.அதில் முக்கிய ஒரு குறிப்பு தான் தண்ணீர்விட்டான் கிழங்கின் மகத்துவமும், மனிதனுக்கு தண்ணீர் விட்டான் கிழங்கு ஆற்றும் மாபெரும் உதவியும்.

எலும்புருக்கி நோய், நேற்று வரை திடகாத்திரமாகத் தோன்றியவரை , உடல் வற்றச்செய்து , உடலை பலவீனமாக்கி தளர்வடையச் செய்யும் ஒரு நோய், நீரிழிவு நோய் உடல் நிலையை மட்டுமல்ல, உடல் இயங்கத் தேவையான சிறுநீரகத்தையும் பலவீனமாக்கி பல்வேறு நோய்களையும் உண்டாக்கிவிடும்.நீர்க்கடுப்பு எனும் சிறுநீர்த்தாரை எரிச்சல், அல்சர் எனப்படும் வயிற்றுப்புண்கள் மற்றும் அதனால் உண்டாகும் மற்ற நோய்கள் மற்றும் பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய் கோளாறுகள் அதனால் உண்டாகும் அதீத சோர்வு.தைராய்டு கோளாறுகளால் உண்டாகும் கட்டி மற்றும் உடல் எடை மாற்றங்கள், தொண்டை வலி,டான்ஸிலிடிஸ் கோளாறுகள்.அதிக உடல் எடை மற்றும் மலச்சிக்கல் காரணமாக ஏற்படும் வெரிகோஸ் வெயின் எனப்படும் இரத்த நாள வீக்கம்.

மனிதனை எப்போதும் சோர்வாகவும் செயல்பாடின்றி முடக்கியும் வைக்கும் உடல் வெட்டை நோயினால் உண்டாகும் சுக்கிலக் குறைபாடு மற்றும் சப்த தாது பலவீனத்தால் ஏற்படும் ஆண்மைக்குறைவு.

போன்ற மேற்சொன்ன நோய்களை, உடலைவிட்டு நீக்கி மனிதர் ஆரோக்கிய வாழ்விற்கு வழி வகுக்கும் சர்வ வல்லமை வாய்ந்த அற்புத ஆற்றல் மிக்கதும் , மனிதர் தம் நல்வாழ்விற்காக தமது வாழ்நாள் முழுவதும் சித்த மூலிகை ஆராய்ச்சியில் அர்ப்பணித்து மேற்சொன்ன நோய்களிலிருந்து நம்மை காப்பாற்ற சித்தர்கள் அருளிச் செய்த மூலிகை வைத்திய வழிமுறைதான் இந்த அரிய உயரிய மூலிகையான தண்ணீர்விட்டான் கிழங்கு வைத்திய முறை.

இவை எல்லாவற்றையும் விட, மிக அதிகமாக வெளி உலகிற்கு இன்றுவரை அறிவிக்கப்படாத ஒரு மாபெரும் பயனையும் மனிதர் நல்வாழ்வு பெற இந்த தண்ணீர்விட்டான் கிழங்கு வைத்திய முறை மூலம் நம் சித்தர் நமக்கு ஆசி வழங்கி இருக்கின்றனர். அது தான் தண்ணீர்விட்டான் கிழங்கின் மூலம் இன்று உலகை அச்சுறுத்தி வரும் புற்றுநோயை தீர்க்க முடியும் என்பது.


மேலும் விவரங்களுக்கு



----------------------------------------------------------------------------------------------------------------------------------

தொடர்புக்கு 
சதுரகிரி இயற்கை அங்காடி
அழகேசன்-94860 72414,
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
http://sathuragiriangadi.blogspot.in/
----------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி 
திரு.கண்ணன் அவர்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக