இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 17 டிசம்பர், 2013

ஜோதி விருட்சம் மணிமாலையின் சிறப்பு அம்சங்கள்

சித்தர்களின் ஆபூர்வ மூலிகைகளின் ஒன்றான ஜோதி விருட்சம் இதனுடைய ஆபூர்வ குணங்கள் இதன் அடியில்  இருக்கும் பாறைகளின் நிறமும் கூட பசுமையாக காட்சி தருகிறது.இதன் அருகில் நாம் அமர்ந்தால் பசி,தாகம்,மன உலைச்சல் போன்ற சிந்தனைகள் வராது.

                   ஜோதி விருட்சம்  அபூர்வ மரம் இங்கு சதுரகிரி மலையில் காணப்படுகிறது. இது பகலில் சாதாரணமாக காட்சி தரும் இந்த அபூர்வ மரம் இரவில் குறிப்பிட்ட தினங்களில் ஒளி வீசும் தன்மை உடையது.இதை காண குரு பலம் இருந்தால் மட்டும் முடியும்,

                     இந்த அபூர்வ மரத்தில் வருடத்தில் ஒரு முறை மட்டுமே பூத்து கனியாகின்றது. இந்த கனிகளை பறவைகளும், விலங்குகளும் விரும்பி சாப்பிட . இதை அறிந்த காட்டுவாசிகள், மலைவாழ் மக்கள், அப்பழங்களை பறித்து சாப்பிடுவார்கள்,

                      இந்த கனிகளை போன்று  எந்த கனிகளை பறவைகள், மிருகங்கள், விரும்பி சாப்பிடுகிறதோ அதை அறிந்த பின்புதான் சாப்பிட ஆரம்பிப்பார்கள்.இது போன்ற பல கனிகளை உன்பதால் இவர்களுக்கு வயது முதிர்ந்தாலும் உடல் தோற்றம் இளமையாகவே காணப்பட்டு உடல் சுருக்கம் இல்லாமலும், தலைமுடி நரைக்காமலும், முடி உதிராமலும், கண்பார்வை 100 வயது  ஆனாலும் கண்ணாடி இல்லாமலே பார்வை குறையாமல் இருக்கும் இதற்க்கு காரணம் இயற்க்கையே!!!

                    இந்த  மரத்தடியில் இருக்கும் கல் போன்ற பாறைகளுக்கே இந்த அபூர்வ  மரத்திலிருந்து சக்தி கிடைக்கிறது என்றால் இதை நாமும் பயன்படுத்துவோம் என்று இந்த கனிகளின் விதையை பார்க்க முத்து மணி வண்ணம் தீட்டியது போல் காட்சி அழித்தது.
               
  இதை கண்ட அவர்கள் மாலையாக நூலில் கோர்த்து அணிய  ஆரம்பித்தார்கள்   அதனால் மனிதனை தாக்கும் தீய சக்திகள் அவர்களை அனுகாது,  வனத்தில் வேலை செய்யும்போது கொடிய விஷஜந்துகள்  தாக்கினால்  இந்த ஜோதிமணியை  5 அல்லது  6 மட்டும் கடித்து சிறியாநங்கையும்  சேர்த்து  சாப்பிட விஷம் உடனே முறியும்,

                  இந்த ஜோதிவிருட்ச மணியை துளசி மணி என்றும் அழைப்பார்கள். இதை பெரியவர்கள் 108 மணியாக வெள்ளி, செம்பு, பொருள்களின் மாலையாக அனிந்து வாரத்தில் ஒரு முறை   ஓம் அகத்தீஸ்வராய  நமஹா!!!  என்று 108 தடவை செபித்து அனிந்தாள் தடைகள் நீங்கி நினைத்த காரியங்கள் நிறைவேரும். பலரும் பயன் படுத்தி கண்டறிந்த உண்மை,

                 மன அழுத்தம் , உடல்சூடு குறைந்து  நரம்புகளை  சரிசெய்து இதயத்தை வழுப்படுத்தும்.வாகனங்களில் செல்லும் போது மன பயம் நீங்கும் திருமண தடை விலகும், தொழில் விருத்தியாகும், வேலை வாய்ப்பு கிடைக்கும்ஆன்மீக சித்து அனுகும், நல்ல ஆன்மாக்களின் அறிமுகம் கிடைக்கும், பில்லி சூனியம் அனுகாது. தூங்கும் போது தீய கனவுகள் வராது,

                இந்த ஜோதிவிருட்ச மணியை சிறு குழந்தைகளுக்கு  கை காப்பு, மாலையாக அனிய அவர்களுக்கு கண்திருஷ்டி, பார்வைகோளாறு, விஷ
கிருமிகள் அண்டாமல் உடல் ஆரோக்கியம் தரும்.


மேலும் விவரங்களுக்கு
www.facebook.com/profile.php?id=100009101367650

https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl

----------------------------------------------------------------------------------------------------------------------------------
தொடர்புக்கு 
சதுரகிரி இயற்கை அங்காடி
அழகேசன்-94860 72414,
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
http://sathuragiriangadi.blogspot.in/
----------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி 
திரு.கண்ணன் அவர்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------------------

கடுக்காய்


மருந்துப் பொருட்களில் மிகவும் உயர்ந்த ஒரு பொருள் கடுக்காய். கடுக்காயில் மருத்துவ குணங்களுடன் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கக் கூடிய குணங்களும் நிரம்பியுள்ளன.
வாதம் எனும் உடல் தோஷம் மழைக்காலத்தில் இயற்கையாகவே கூடுவதால், காலையில் எழும்போது தசைப் பிடிப்பு, மூட்டு வலி, பூட்டுகளில் வீக்கம் வலி போன்றவை அதிகம் தென்படும். இரண்டு கடுக்காய் தோலுடன் இந்துப்பு சேர்த்துச் சாப்பிட்டால், இந்த உபாதைகள் நன்கு குறையும்.

 பசியின்மை, வயிறு உப்புசம், ருசியின்மை, புளித்த ஏப்பம், மலச்சிக்கல் போன்ற அஜீரண நோய் நிலைகளில் கடுக்காய் போதுமானது.

மேலும் விவரங்களுக்கு
www.facebook.com/profile.php?id=100009101367650

https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl


----------------------------------------------------------------------------------------------------------------------------------
தொடர்புக்கு 
சதுரகிரி இயற்கை அங்காடி
அழகேசன்-94860 72414,
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
http://sathuragiriangadi.blogspot.in/
----------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி 
திரு.கண்ணன் அவர்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆகாச கருடன் கிழங்கு

வீட்டில் ஆகாச கருடன் கிழங்கை கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக் கொண்டே, கொடி வீசித் தளிர்க்கும்.இது வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும்.இந்தக் கிழங்கு இருக்கும் இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும் அணுகாது.அப்படி வந்தால் அவற்றின் விடம் பங்கப்படும அளவுக்குசக்தியுள்ளது இந்த ஆகாச கருடன் கிழங்கு.
கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி சூனியம்,செய்வினை போன்றவை அணுகாது. இதை மீறிய சக்தி நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் அதன் உயிரை அச்சக்திக்கு பலியாக இட்டு நம்மைக் காக்கும்.(மீச்சக்திக்கு பலியான கிழங்கு கருகி அழுகிவிடும்).
இந்தக் கிழங்கு நஞ்சு முறிவிற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.


நீர்க்கொழுப்புக்கட்டி கரைய , இந்த கிழங்குடன் மல்லிகை மொட்டு சம அளவு கலந்து அரைத்து , காலையில் பசும் பாலில் கலந்து குடித்து வர , விரைவில் கட்டி கரையும்.


மேலும் விவரங்களுக்கு
www.facebook.com/profile.php?id=100009101367650


https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl

----------------------------------------------------------------------------------------------------------------------------------
தொடர்புக்கு 
சதுரகிரி இயற்கை அங்காடி
அழகேசன்-94860 72414,
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
http://sathuragiriangadi.blogspot.in/
----------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி 
திரு.கண்ணன் அவர்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------------------

கற்பூர வள்ளி தைலம்

தலைவலி,ஜலதோசம்,ஆஸ்த்துமா இளைப்பு, போன்றவற்றிற்கு மிகச்சிறந்த நிவாரணி.உறக்கத்தில், குறட்டை விடும் வழக்கத்தை அடியோடு நிறுத்த, கற்பூர வள்ளி தைலத்தை படுக்கப்போகுமுன், ஒரு துளி மூக்கில் முகர்ந்து, நெற்றியில் தடவி வர விரைவில் , நிவாரணம் கிடைக்கும்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------
தொடர்புக்கு 
சதுரகிரி இயற்கை அங்காடி
அழகேசன்-94860 72414,
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
http://sathuragiriangadi.blogspot.in/
----------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி 
திரு.கண்ணன் அவர்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------------------

அணைத்து விதமான தோல் நோய்கள் குணமாகும் தைலம்

வெண் புள்ளி'என்பதுநோயல்ல!' ஒரு குறைபாடு .
தோல் வியாதிக்கான இந்த பதிவு ஒரு மீள் பதிவாகும் ஏனெனில் சொரியாசிஸ்,எக்ஸிமா போன்ற 40 வகையான தோல் வியாதிகளில் பாதிக்கப்பட்ட பல்வேறு மக்கள் இறைவன் அருளால் குணமடைந்துள்ளனர்.
அனைத்திலும் வெண்மையே விரும்பும் மானிட இனம் வெண்புள்ளியும் தலை முடி வெள்ளை ஆகும் போதும் வாழ்க்கைளில் துவண்டு விடுகின்றனர். பொதுவாக வெண்புள்ளி உள்ளவர்கள் வெளியே செல்ல தயங்குகின்றனர். மற்றவர்களிடம் பேசும் போதும் தனக்கு உள்ள குறையை நினைத்துக்கொண்டு மனதளவில் பதிக்கபடுகின்றனர். இந்த நோய் உலக அரங்கில் வெறும் ஒரு சதவீதம் என்றாலும் கூட சரியான சிகிச்சை இல்லாமையால் பாதிப்பு பெரிய அளவில் உணரபடுகிறது.
வெண் புள்ளி' என்பதுநோயல்ல மாறாக அது ஒரு
குறைபாடே. ஆம்! அது நிறமிகளில் உண்டாகும் குறைபாடு, அவ்வனம் இந்த குறைபாட்டை சீர் செய்யும் போது வென்புள்ளியையும் முற்றிலும் மாற்ற முடியும். பொதுவாக வெண்புள்ளி உருவாவதற்க்கு சரியான காரணம் இல்லவிட்டலும், பல்வேறு காரணிகள் வெண்புள்ளி உருவாவதில் பெரும்பங்கு வகிக்கின்றது. நமது உடலின் உள்ள மெலனின் என்ற நிறமிகளே ஒரு மனிதனின் நிறத்தை தீர்மாணிக்கிறது. நமது வெள்ளை அணுக்கள் தவறுதலாக மெலனின் நிறமிகளை வெளி உயிரியாக பாவித்து அவற்றை அழிப்பதினால் நிறமிகளின் சமநிலை பாதிக்கப்பட்டு அதிகப்படியான வெண்மை நிறத்தை தோற்றுவிக்கிறது.
மேலும் சில வேதிபொருட்களையும் இரசாயனம் கலந்த உணவுப்பொருட்களையும் நாம் உட்கொள்ளும் போது அதில் இரசாயன காரணிகள் நிறமிகளை அழித்துவிடுகின்றன. மேலும் வேதிபொருட்களின் பாதிப்புக்கு நமது தோல் உள்ளாகும் போதும் நிறமிகள் பாதிப்படைகின்றன.
இவர்கள் எல்லோருமே செய்த பொதுவான ஒரு விசயம், எல்லா வகை மருத்துவத்தையும் முயற்சித்து பார்த்தது. எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில், யாராவது ஒரு மருத்துவத்தை சொன்னால், உடனே அதற்கு மாறிவிடுவார்கள். அதை சில நாட்கள் தொடர்வார்கள். தொடர்ந்த சில நாட்களில் மிக நன்றாக கேட்கின்றது(?!), நன்றாக இருக்கின்றது என்பார்கள். சில மாதங்கள் கழித்து பார்த்தால் நிலைமை மோசமாகி இருக்கும்.
ஆனால் நவீன மருத்துவத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள தொலை நீக்கிவிட்டு பாதிப்படையாத இடத்தில உள்ள தோலானது மாற்றி வைக்கபடுகிறது. எது ஒரு தற்காலிக முறையே தவிர , நிரந்தர தீர்வு கிடையாது.. எங்கள் அருகில் உள்ள நண்பர் ஒருவருக்கு நீண்ட காலமாக சொரியாசிஸ் இருந்து வருகிறது ,அவரிடம் அண்ணா ,இதற்க்கு எளிய மருத்துவம் இருக்கிறது ,உங்களால முடுந்த அளவு பணம் கொடுங்கள் இல்லை என்றால் வேண்டாம் என்று கூறினோம்.அவரோ பல வைத்தியம் பத்தாச்சு தம்பி ,இனி பண்றமாதிரி எண்ணம் இல்லை என்று ,மிகவும் வெறுத்து போய் கூறினார்கள் ,இதற்க்கு காரணம் ,இந்த நோயை பயன்படுத்தி அணைத்து வகையான மருத்துவர்களும் கொள்ளை அடிக்கின்றனர்.
இது பணதையும் வங்கி கொண்டு அவர்களுடைய நோய்களையும் வாங்கி கொள்வதற்கு சமம்.
நாங்கள் மருந்தின் விலையை அறிவித்து விடுகிறோம்.அவர்களால் முடிந்தால் வாங்கி கொள்ளலாம்,இல்லை என்றால் இலவசமாகவே அளிக்கிறோம்,இது எங்களிடம் சிகிசைக்கு வருபவர்களுக்கு நன்றாக தெரியும்.ஒரு சிலர் நோய் முற்றிலும் குணமான பின்பு ,பிறருக்கு இலவசமாக செய்து கொடுங்கள் என்று பொருள் உதவி செய்கின்றனர்.மேலும் குனமனவர்களின் புகைப்படத்தை போடுங்கள ,அவர்களுடைய தொலைபேசி எண் தாருங்கள் ,நாங்கள் எப்படி நம்புவது என்று கேட்கின்றனர்,அவர்களுக்கு ஒன்று சொல்லி கொள்கிறோம்.
ஏற்கனவே முகுந்த மனவேதனை உடன் தான் அவர்கள் வருகின்றனர் ,மறுபடியும் அவர்களுடைய ,பழைய படங்களை பார்க்க நேர்ந்தால் அவர்களுக்கு ஏற்படும் மனவேதனை பற்றி சிந்தித்து பாருங்கள்
பொதுவாக இதற்கு கை மருந்தாக கறிவேப்பிலையும்,கீழநெல்லியும் மட்டுமே பரிந்துரைக்கபடுகிறது. இது ஓரளவு வெண்புள்ளியை கட்டுக்குள் வைக்கின்றது.
மேலும் தக்காளி,புளி, வெங்காயம், வாழைப்பழம்,ஆப்பிள் பிரெட்,கார்ன் புட்ஸ்,கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு,போர்க்,வெள்ளை சர்க்கரை ,மைதா மற்றும் மைதாவில் செய்த உணவு பொருள்களை சேர்க்க கூடாது
இதற்கு தீர்வாக சிவனார் வேம்பு தைலமும் சிவனார் சூரண பொடியும் இந்த வெண்புள்ளியை சுமார் ஆறு முதல் எட்டு மாதங்களில் முழுவதுமாக விரட்டுகிறது. இந்த தைலத்தை உடலில் பூசிக்கொண்டு சூரிய ஒளியில் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் நிற்கும் பொழுது மெலனின் உற்பத்தியை அதிகரிக்க செய்வதன் மூலம் வெண்புள்ளியை குறைகிறது..
மேலே குறிப்பிட தோல் நோய்கள் தவிர மரபியல் குறைபாடு காரணமாக ஏற்படும் தோல் நோயை தவிர அனைத்து வகையான தோல் நோய்களையும் மிகவும் எளிமையான முறையில் அகத்தியரின் ஆசியுடன் குணமாகும்
பல வகையான தோல் நோய்கள் தோல் கான்செர் (Skin Cancer),தோல் அழிநோய்(Lupus),அம்மை(Measles),முகப்பரு(Acne-,Hemangioma of Skin,சளி புண்(Cold Sore),சொரியாஸிஸ்(Psoriasis),ரோஸாசியா(Rosacea),விட்டிலிகோ(Vitiligo),மருக்கள்(Warts),திசுப்படல அழற்சி(Necrotizing Fasciitis),மென்மையான திசு தொற்று(Cutaneous Candidiasis),தோல்தொற்று(Carbuncle),புரையோடுதல்(Cellulitis),குறைந்து போன வியர்வை(Hypohidrosis),கொப்புளங்கள் நிறைந்த தோல் நோய்(Impetigo),தோல் சுருக்கம்(Cutis Laxa), படுக்கை புண் (Decubitus Ulcer),அக்கி என்னும் தோல் நோய்(Erysipelas),டயபர் வெடிப்பு(Diaper Rash),டைஷிட்ரோட்டிக் படை(Dyshidrotic Eczema),கங்க்கர் புண்(Canker Sore),ஹெர்பெஸ் வாய்ப்புண்(Herpes Stomatitis),பூஞ்சை கால்ஆணி தொற்று(Fungal Nail Infection),மீன் செதில் நோய்(Ichthyosis Vulgaris),அழற்சி ஏற்படும் தசையிழிவு(Dermatomyositis),தொற்று(Molluscum Contagiosum),தவறாக வளர்த்த நகங்கள் (Ingrown Nails),கை கால் தோலழற்சி(Acrodermatitis),சருமமெழுகு நீர்க்கட்டி(Sebaceous Cyst),ஊறல்(Seborrheic Keratosis),பைலோனிடால் சைனஸ்(Pilonidal Sinus),வளர்வடு(Keloid),கொப்புள தோல் நோய்(Lichen Planus),ஆக்டினி கெரடோசிஸின்(Actinic Keratosis),Stasis Dermatitis and Leg Ulcers(தோல் மற்றும் கால் புண்),Corns (கால் ஆணி),சிரங்கு(Eczema),வளைய பல நிற தோற்றம்(Tinea Versicolor),குமிழ்ச்சருமமனையம்(Pemphigoid),வாய் புண்கள்(Mouth Ulcers),கொப்புள புண்கள்(Shingles)
மேலும் விவரங்களுக்கு
1.Sathuragiri Iyarkai Angadi (https:// www.facebook.com/profile.php?id=100009101367650)
----------------ஓம் அகஸ்திசாயா நமஹா------------------------------------
தொடர்புக்கு
சதுரகிரி இயற்கை அங்காடி-
அழகேசன் 94860 72414,
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
http://sathuragiriangadi.blogspot.in/
-----------------------------------------------------------------------------------------------
நன்றி – திரு. கண்ணன் அவர்கள்,
மற்றும் healthline வலைத்தளம்
----------------------------------------------------------------------------------------------

மூட்டு வலி தைலம்

ஆர்த்ரைடிஸ் எனப்படும் எலும்பு தேய்மான நோய்களால் உண்டாகும் கழுத்து வலி மற்றும் இடுப்பு வலி அதனால் உண்டாகும் வேதனைகளையும் இந்த மூட்டு வலி தைலத்தை காலை மாலை இருவேளை தடவி, சில மணி நேரம் கழித்து வெந்நீரில் கழுவிவிட, சிறப்பாக குறுகிய நாட்களில், தீர்த்து விடும்.


இந்த மூட்டு வலித் தைலத்தில் அத்திப்பால் , சிற்றாமுட்டி ,விராலி , மயிலாடுங் குறும்பை ,கண்பலா மரப்பட்டை , பேராமுட்டி , மூக்கிரட்டை வேர் , கோரைக் கிழங்கு ,பிரண்டை,வேலி பருத்தி, வாதநாராயணன், வாதமடக்கி , முடக்கறுத்தான் , மற்றும் பல அரிய வகை மூலிகைகளைச்சேர்த்து எண்ணெயாக காய்ச்சி எடுக்கப்படுகிறது.


இந்த மூட்டு வலி தைலம், மூட்டு வலிக்காக மட்டுமல்ல , மூட்டுக்கள் பூட்டு விட்டுப் போதல், இரத்தத்தில் எலும்புகளைத் தேய்க்கும் காரணிகளால் எலும்புகளிலும் , எலும்பு மூட்டுக்களிலும் ஏற்படும் தேய்மானம், எலும்பு முறிவு, மூட்டுக்களில் சவ்வு கிழிந்து போதல், இரத்தக் கட்டு , கீழ் முதுகு வலி , பக்க வாதம் போன்ற பல வியாதிகளைத் தீர்க்கும்.இதை மேற்பூச்சாகப் பூசி வர இதிலுள்ள அத்திப் பால் எலும்பை என்றும் ஒடியாத இரும்பாக்கும்.


எலும்பு முறிவு, மூட்டுக்களில் சவ்வு கிழிந்து போதல், மூட்டுக்களில் மசகு இல்லாமல் சடசட எனச் சத்தத்துடன் வலி வருதல் , தசைப் பிடிப்பு, நரம்பு வலி, நரம்பு இசிவு, நரம்புகள் சுருண்டு கொள்ளுதல் ,சுழுக்கு மற்றும் வாதக் கோளாறுகள், கழுத்தெலும்புத் தேய்வு,முதுகுத் தண்டு தட்டுக்கள் நழுவுதல் , கீழ் முதுகு வலி , ஒரு பக்க பக்க வாதம் , இரு பக்க பக்க வாதம், குறை பக்க வாதம் போன்ற பல வியாதிகளை குணமாக்கும்.

மேலும் விவரங்களுக்கு




----------------------------------------------------------------------------------------------------------------------------------
தொடர்புக்கு 
சதுரகிரி இயற்கை அங்காடி
அழகேசன்-94860 72414,
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
http://sathuragiriangadi.blogspot.in/
----------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி 
திரு.கண்ணன் அவர்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஹேர் ஆயில் -உபயோகித்த ஒரு வாரத்தில், முடி உதிர்தல் நிற்கும்.

ஹேர் ஆயில் உபயோகித்த ஒரு வாரத்தில், முடி உதிர்தல் நிற்கும்.


பணம் ஒரு பொருட்டள்ள ,தொடர்புக்கு 94860 72414,95004 58596

தலைமுடி உதிர்தல்,இன்று அனைவரையும் சற்றே, மன வருத்தம் கொள்ள வைக்கும் ஒரு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது, மாறி வரும் வாழ்க்கைச் சூழல் ,உணவுமுறை , கல்விக்கூட கடும் பயிற்சியினாலும்,பணியிட அதிக வேலைச்சுமையாலும் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் தவறான பழக்க வழக்கங்களின் காரணமாகவும், முடி உதிர்தல் ஏற்படுகிறது.

அதிக முடி உதிர்வே, பின்னர் வழுக்கையாக மாற்விடுகிறது, இத்தகைய மோசமான நிலையை வருமுன்னரே , சரிசெய்ய, தலைமுடியைக்காக்க, நமக்கு ஏராளமான தீர்வுகள் காணக்கிடைத்தாலும், பக்க விளைவுகள் இல்லாததும், நிரந்தர தீர்வு தருவதுமான ஒரு மருந்து தான் இது.

மஞ்சள்கரிசாலை,வெள்ளைகரிசாலை,மருதாணி,செம்பருத்தி,நாய்க்கரித்தான் பட்டை,குமிழம்பட்டை,கற்றாளை,குமிழம் பழம்,செங்கடுக்காய் பூ, வெட்டிவேர் மற்றும் பல அரிய மூலிகைகள் கலந்து இந்த ஹேர் ஆயில் தயார் செய்யப்படுகிறது.

இந்த ஹேர் ஆயிலை ஆண் பெண் இரு பாலரும் தலையில் ஊரவைத்து தேய்த்து, சற்று நேரம் கழித்து குளித்து வர, தலைமுடி உதிர்தல், இளநரை, போன்றவை நீங்கும்.
பொடுகு:
சிலருக்கு தோலில் எண்ணைத்தன்மை இருப்பதால், ஒருவித பூஞ்சை கிருமிகள் தொற்றால், தலையில் வெள்ளைச்செதில்களாக பொடுகு உண்டாகும்.
இந்தப்பொடுகு, தலை வாரும் போது முதுகு,பின் கழுத்து இவற்றில், வெள்ளைச்செதிலாக உதிரும். அரிப்பு அதிகமாக இருக்கும். பொடுகு அதிகமாக பள்ளி,கல்லூரி மாணவியரைப்பாதிக்கும். மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தலை அரிப்பால்,பெரிதும் சிரமப்படுவர்.இதனால் விழாக்கள் மற்றும் பொது இடங்களில், தலை அரிப்பால், இயல்பாக இருக்க முடியாமல்,மிகவும் அவதிக்குள்ளாவர்.

இந்த பொடுகு ஆண்களையும் , விட்டு வைப்பதில்லை.
தலையில் அரிப்பைத்தூண்டி, தலைமுடியையும் சமூக வாழ்வையும் சிரமத்திற்குள்ளாக்கும், இத்தகைய கொடிய பொடுகை, இந்த ஹேர் ஆயில் , அற்புதமாக செயல்பட்டு, அறவே ஒழித்து விடும். முறையாக உபயோகித்து வர,விரைவில் பலன் கிட்டும்!

காலையில் , தலை முடியின் வேர் வரை ஹேர் ஆயில் நன்கு தடவி, சில மணிநேரம் ஊற வைத்து, பின் குளித்து வர வேண்டும்.


மேலும் தலைமுடி உதிர்ந்த இடத்தில் விரைவில் முடி முளைக்கும்.


இந்த ஹேர் ஆயில் உபயோகித்த ஒரு வாரத்தில், முடி உதிர்தல் நிற்கும்.


மேலும் விவரங்களுக்கு



----------------------------------------------------------------------------------------------------------------------------------
தொடர்புக்கு 
சதுரகிரி இயற்கை அங்காடி
அழகேசன்-94860 72414,
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
http://sathuragiriangadi.blogspot.in/
----------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி 
திரு.கண்ணன் அவர்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------------------

மூலிகை ஹேர் டை

100% பக்க விளைவுகள் இல்லாதது! தலைமுடிக்கு இயற்கையான கருமை நிறத்தையும்,தலைக்கும் உடலுக்கும் குளுமை அளிக்கக்கூடியது!

சிலர் தலைமுடியில் நடுத்தர வயதிலே, இளநரை தோன்ற ஆரம்பித்தால், வயது அதிகரித்து விட்டது என எண்ணி மிகக்கவலை கொள்வார்கள்,குடும்பக்கடமை முடிக்க வில்லையே,இன்னும் பொருளாதாரத் தன்னிறைவு அடையவில்லையே என ஏதேதோ, கற்பனை செய்துகொண்டு தலைமுடியின் நரையால் வாழ்க்கையே முடிந்தது போல நிகழ்காலத்தை, துன்பமாக்கிக்கொள்வர்.
சிலரோ, தலைமுடி நரைத்தால்தான் என்ன, நமக்கு தான் நிறைய ஹேர் டை கடைகளில் கிடைக்கிறதே, என ஏதேதோ கிடைத்த ஹேர் டை எந்த விலையானாலும் வாங்கி, தலையில் தடவிக்கொண்டு செயற்கைக் கரு நிறத்தை தலையில் உண்டாக்க முயல்வர், ஆயினும், தலைமுடியை அது கருப்பாக்குகிறதோ இல்லையோ, மி அதிக பக்க விளைவுகளை பரவலான ஹேர் டைகள் அளித்து விடுகின்றன.அதாவது சில இடங்களில் மட்டும் தோன்றிய நரை , இந்த செயற்கை சாயத்தினால், தலை முழுவதும் பரவிவிடும் , அத்துடன் அடிக்கடி சாயம் தலைக்கு அடிக்க வைக்கும், நீங்கள் ஒரு தடவை தலைக்கு சாயம் அடித்து விட்டு, பின்னர் சாயம் அடிக்காமல், வெளியில் எங்கும் செல்ல இயலாது, உஙகளுக்கே ஏன் இந்த சாயம் உபயோகித்தோம் , ஏதோ சில முடிகள் தான் நரைத்து இருந்தன, இப்போது , தலையெங்கும் பரவி, சினிமா நடிகர்கள் மேக்கப் போட்டுக்கொண்டு வெளியில் வருவது போல, நாமும் , டை அடித்துக்கொண்டுதான் வெளியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதே, என வருந்தும் நிலைக்கு, சென்றுவிடுவர்.
நாம், இங்கே மனிதரின் புறத்தோற்ற விருப்பத்தைக்குறைத்துக்கூற முயல வில்லை, மாறாக , அவர்களின் அந்த அதீத ஆர்வம், எப்படியாவது , தலை நரையை யாரும் அறியுமுன் , நாம் ஏதாவது ஹேர் டை வாங்கி, அதை மறைத்து விட வேண்டும், என்ற எண்ணத்தால் , கடைக்காரர் பரிந்துரை செய்வதையோ அல்லது வேறு எவரும் சொன்னதையோ அல்லது இணையத்தில் பார்த்தோ அதை வாங்கி பயன்படுத்தி , தலைமுடிக்கு நிரந்தர கேடு விளைவித்துக்கொள்வர். இந்த செயற்கை டை பாதிப்புகள் , தலை முடி உதிர்தல், ஒவ்வாமை மற்றும் வேறு சில சருமப்பாதிப்புகளை உண்டாக்கும்.
கண்களின் பார்வைத்திறனையும் அதிகரிக்கும்!
அடிக்கடி பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை!


மேலும் விவரங்களுக்கு





----------------------------------------------------------------------------------------------------------------------------------
தொடர்புக்கு 
சதுரகிரி இயற்கை அங்காடி
அழகேசன்-94860 72414,
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
http://sathuragiriangadi.blogspot.in/
----------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி 
திரு.கண்ணன் அவர்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------------------

திரிபலா பொடி

திரிபலா சூரணம்-சுத்தமாகவும் ,சரியான வழிமுறைகள் பின்பற்றி தயாரானது
மலச்சிக்கல் தீரும், குடல் புண் ஆறும். இரத்தச் சோகை அதிக உடல் எடை குறையும். உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு , வெளியேறும்.
நன்றாக காய வைத்த நெல்லி வற்றல்,கடுக்காய்த்தோல், மற்றும் தான்றிக்காய்த்தோல் பொடிகள் ,சம அளவில் கலந்ததே ,திரிபலா சூரணம்.
இதை, இரவில் ஒரு தேக்கரண்டி அளவு சுடுதண்ணீரில் கலந்து தினமும் சாப்பிட்டு வர , குடல் புண் ஆறும். இரத்தச் சோகை அதிக உடல் எடை குறையும்.உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு , வெளியேறும்
உடல் முதுமை மாறி, இளமைப்பொலிவு ஏற்படும். மலச்சிக்கல் தீரும்.திரிபலாவில் க்ரீன் டீயை விடவும் அதிக ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உள்ளதாக ஆய்வு கூறுகிறது
ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை- இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம்.
திரிபலா குடல் அழற்சிக்குக்கூட நல்ல மருந்து.
திரிபலாவை புறக்காயங்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம். திரிபலா கலந்த கொதிக்கவைக்கப்பட்ட நீரால் காயங்களைக் கழுவதும் நல்ல பயன் தரும்.
அதேபோல வாய்ப்புண் வருகிற போதும் இதைப் பயன்படுத்தலாம்மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்த லாம்
தொண்டை வலி:
சளி பிடிக்கிறதுக்கு ஒரு நாலைஞ்சு மணி நேரத்துக்கு முன்னாடி பாத்தீங்கன்னா தொண்டை ஒரு மாதிரி கரகரக்கும். அப்பவே தெரியணும், நமக்கு நாளைக்கு சளி பிடிக்கப் போவுதுன்னு. அந்த மாதிரி நேரத்துல நான் என்ன செய்வேண்டுமென்றல், கொஞ்சம் திரிபலாவை எடுத்து சுடுதண்ணியில போட்டு, நல்லா வாய் கொப்பளிக்க . சளி வராது. தொண்டைக்கும் இதமா இருக்கும். பிள்ளை அவ்வப்போது பள்ளிக்கூடத்திலிருந்து கொண்டுவரும் மற்ற தொண்டை வலிகளுக்கும் இது நல்ல மருந்து. வாய் கொப்புளிச்சுத் துப்பத் தெரிந்த குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். முழுங்கினாலும் பெரிய பிரச்சினை இல்ல, இருந்தாலும் ரொம்ப சின்ன பிள்ளைங்களுக்கு வேணாம்.
பல்லிடுக்குப் பிரச்சினை:
சில நேரம் பல்லிடுக்கில் உணவுத் துகள் மாட்டிக் கொள்கிறது. காரட் துண்டு, ஆட்டுக்கறி இப்படி. அப்போது கவனிக்காம விட்டுட்டா, அடுத்த நாள் வலிக்கும். அப்போ அந்தத் துணுக்கை floss போட்டு எடுத்துட்டாலும் வலிக்கும். அந்த நேரத்தில் திரிபலாவை சுடுதண்ணியில போட்டு வாய் கொப்பளிச்சா, அல்லது அந்த இடத்தில் வைத்து லேசாக பல் தேய்ப்பது போலத் தேய்த்தால் வலி மாயமாய்ப் போகிறது. மற்ற வகை பல்/ஈறு வலிகளுக்கும் இதைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.
திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?
திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தி
ஆயுர்வேதத்தில் திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ‘ஆன்டிபாடி’ (antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்
உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான “கட்டற்ற காரணிகளை” (free radicals) உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது.
செரிமானமின்மை
செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் (Bile) திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது. உணவுப்பாதையில் தேவையான கார அமிலநிலையை (pH level) தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது.
மலச்சிக்கல்
திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.
வயிற்றுப் பூச்சிகளும் தொற்றுகளும்
வயிற்றில் பூச்சி வளர்வதையும், தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது தான் திரிபலா. குறிப்பாக வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.
இரத்தசோகை
இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும். (இரத்த சோகை என்பது இரத்தத்தில், ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து காணப்படும் நிலையாகும்).
சர்க்கரை நோய்
திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் (pancreas) தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணையத்தில்தான் இன்சுலினைச் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்கள் (langerhans) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. மேலும் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும். மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா (hyperglycemia) எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், இதனை எடுத்துக் கொள்வது சிறப்பானது.
உடல்பருமன்
இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். இதனுடைய மருத்துவக் குணத்தினால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.
சருமப் பிரச்சனைகள்
இது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது.
சுவாசக் கோளாறுகள்
சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சைனஸ் என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது. மேலும் நமது சுவாசப்பாதையிலுள்ள சளியில் பாக்டீரியாக்கள் வளராமலும் இது தடுக்கிறது.
தலைவலி
தலைவலிக்கு நிவாரணமாகவும் திரிபலா பயன்படுகிறது. குறிப்பாக வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தை அளிக்கிறது.
புற்று நோய்
புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகளின் படி, திரிபலாவுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க உதவி செய்கிறது. அதன்மூலம், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் (metastasis) வளரும் அபாயத்தையும் குறைக்கிறது.---thanks kulasaisulthan.

மேலும் விவரங்களுக்கு
 www.facebook.com/profile.php?id=100009101367650

--------------------ஓம் அகஸ்திசாய நமஹா ----------------------------------
தொடர்புக்கு
சதுரகிரி இயற்கை அங்காடி
அழகேசன்-94860 72414
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
http://sathuragiriangadi.blogspot.in/
-----------------------------------------------------------------------------------------------
நன்றி
kulasaisulthan.wordpress.com
sundaravadivel.blogspot