இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 24 பிப்ரவரி, 2014

மலைத்தேன்

 






 நாங்கள் மலைவாழ்மக்களுக்கு உதவும் நோக்கத்தில் அவர்களுடன் காடுகளுக்குள் சென்று எங்களுக்கு தேவையான மலைத்தேன் மற்றும் பிறபொருள்களையும்வாங்கிவந்து,மிகவும் குறைந்த விலையில் உங்களுக்கு மலைதேனை அளிக்கிறோம்.

 

முற்றிலும் நமதுகண்பார்வையில்அவர்கள்தேனைஎடுத்துநாம்கொண்டுசென்ற் பாத்திரத்தில் தேனை ஊற்றி அளிக்கின்றனர்.

 

விற்பனையாகும்தேனின்வருமானம்முழுவதும்மலைவாழ்மக்களுக்கே சென்று சேரும்,ஆகையால் இதில் எந்தவிதகலப்படமும் இல்லை என்பதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்.

 

கிடைக்கூடிய தேன் வகைகள்

 

1.மலைத்தேன்

2.கொம்புத்தேன்

3.காட்டுபுற்றுதேன்

4.சதுரகிரி மூலிகை மலைத்தேன்

5.நாட்டு தேன்

6.அடுக்குத்தேன்

7.குகைத்தேன்

8.சிறுதேன்

 


கடைகளில்தேன்வாங்கும்போது lable-யைபாருங்கள்நண்பர்களே

தேன்-சில வினோதங்கள்

தேன் ஒரு உன்னதமான உணவு,அதைவிடநிகரில்லாமருந்து,மேலும் மற்ற மருந்துகளை தேனில் கலந்து தரும் பழக்கம் நீண்ட காலமாகஉள்ளது,இதற்க்கு முக்கிய காரணம் தேன் முழுமையாக எளிதில் உடனடியாக ஜீரணமாகிஇரத்தத்தில் கலந்து உடலில் கலந்துவிடும்.தேனை மட்டும் தான் எப்போது வேண்டுமானலும்சாப்பிடலாம்,ஆனால்அளவோடு சாப்பிட வேண்டும்.

நமது நாக்கின்நூனி பகுதியில் தேனை தடவ அதுவே இரத்தத்தில் கலந்து நமக்கு ஆற்றலை தரும்.

தேனை செரிமானம் செய்யாஇன்சுலின் தேவை இல்லை,

குடல் நோய் பாதிப்பு உள்ளவர்கள் நீரில் தேன் கலந்து மெதுவாக உமிழ்நீருடன் கலந்து அருந்த சிறந்த பலனை உடனடியாக கொடுக்கும்.

சுத்தமான தேனை நாம் அனுபவதின் மூலமாக தான் சுவைத்து உணர இயலும்.தேனை ஒரு கிளாசு நீரில் சிறிதளவு விட்டால் கரையாமல் அடியில் போய் நிற்க்கும் என்பது உண்மையல்ல,இதே போல் பேப்பரில் தேன் விட்டால் உறிஞ்சாது என்ற கூற்றும் உண்மை அல்ல.காரணம்தேனை மனிதன் சமைத்து தருவதில்லை,தேனிக்கள் பல்வேறு வகையான தாவரங்களில் உள்ள பூக்களில் இருந்து பல்வேறு காலநிலைகளில் இனிப்பு தன்மை உள்ள திரவத்தை எடுத்து அதை தேனாக மாற்றம் செய்து கொடுக்கிறது.பொதுவாக வெயில் காலங்களில் கிடைக்கும் தேன் சற்று கெட்டி தன்மையாக இருக்க வாய்ப்புகள்அதிகம்,காரணம் ,பூக்களில் உள்ள இனிப்பு திரவத்தில் நீர் தன்மை குறைவாக இருக்கும்,இதுவேகாலநிலைமாறமாற இனிப்பு திரவத்தில் நீர் தன்மை கூடி கொண்டே போகும்.கூடுகளில் தேனில் இருக்கும் நீர் கால நிலை பொருத்து ஆவியாதல் கூட குறைய இருக்கும்.இதனால் தான் நீரை விட சற்று கெட்டியான தேனும், ஜாம் போன்ற தேனும்,எண்ணைய்பதத்தில்தேனும் கிடைக்கும்.

 

இதேபோல்,தேன் ஏறக்குறைய அறுசுவைகளிலும் பல நிறங்களில்இருக்கும்.எடுத்துக்காட்டாக நாவல் மரம்,அத்தி,ஆலமரம் அதிகம் உள்ள இடங்களில் எடுக்கும் தேன் அதிக துவர்ப்புடன் கூடிய இனிப்பாக இருக்கும்.மலைவேம்பு,எள்,வேம்புஇவைகள் அதிகம் உள்ள பகுதியில் கிடைக்கும் தேன்  அதிக கசப்புடன் கூடிய இனிப்பாக இருக்கும்.நெல்,எலுமிச்சை,நெல்லிஇவைகள் அதிகம் உள்ள பகுதியில் கிடைக்கும் தேன்  அதிக புளிப்புடன் கூடிய இனிப்பாக இருக்கும்.மிளகு,காப்பி,இவைகள் அதிகம் உள்ள பகுதியில் கிடைக்கும் தேன்  அதிக கார்ப்புடன்(காரம்) கூடிய இனிப்பாக இருக்கும்.முக்கனிகள் மற்றும் இனிப்பு சுவை தரும் மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் கிடைக்கும் தேன் அதிக இனிப்பாக இருக்கும்.உவர்ப்பு சுவை உடைய தேனை இதுவரை சுவைத்தது இல்லை.

இதேபோல்நிறம்,மணம் கூட மாறுபடும்.

பொதுவாக தேனும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் படிப்படியாக தொடர்ச்சியாகவும்மெதுவாகவும் சர்க்கரை(கற்கண்டு) போல படியும்,இதனை அப்படியே எடுத்துப்பயன்படுத்தலாம்,சுவைஅதிகமாகதான்இருக்கும்,உலர்ந்தும்,படிகமாகியும்,வெள்ளைநிறமாகமாறுவதுஇயற்கையானது, காரணம் தேன் என்பதே ஒரு அடர்த்தியான சர்க்கரை திரவம்தான் அதாவது 70 சதவீதம் சர்க்கரையும் 30 சதவீதம் நீரும் சேர்ந்த கலவைதான்,குறிப்பிட்ட காலத்தில் இந்த இரண்டும்தனிதனியா பிரிந்து விடவேண்டும் இது இயற்கையின் நியதியும் கூட..(எ.கா:சுண்ணாம்பும்,நீரும் கலந்த கலவை தெளிவது,பெயிட்கலவையில் மேலே நீர்மமும் கீழே வேதியியல்கலவையும்படிவது).தேன் கட்டியாவது,அல்லதுஉறைவது அல்லது படிகமாக மாற்றம் அடைய (ஒரு மாதம் முதல் இரண்டு வருடம் வரை காலம் எடுக்கும்)காரணம் அதில் உள்ள குளுக்கோஸ்(சர்க்கரை மூலக்கூறு) தான். நாம் உடனடியாக அது கலப்பட தேன் என்று முடிவுக்கு வந்துவிட கூடாது,விரைவில்படிகமாக மாற வெப்பநிலை ஒரு காரணமாக உள்ளது 10 டிகிரிசெல்சியஸ் கீழ் இருந்தால் தாமதம் ஆகும்,10 டிகிரி முதல் 21 டிகிரிசெல்சியஸ் வரை வெப்பநிலையில் விரைவாக படிகமாகமாறும்.21 டிகிரிசெல்சியஸ்வெப்ப நிலைக்கு மேல் செல்ல செல்லபடிகமாவதுதாமதமாகும் ஆனால் தேனின் உயிர் சத்துக்கள் அழிய தொடங்கும்.

 

இந்த 70 சதவீதசர்க்கரையில் 30 முதல் 45 சதவீதம் ப்ரக்டோஸ்சும், 25 முதல் 40 சதவீதம் குளுக்கோஸ்சும் உள்ளது. மீதம் உள்ள 30 சதவீதம் நீரில் தான்,பூக்களின் 300 க்கும்மேல்பட்டசத்துகள்,குணங்கள்,மணங்கள் அடங்கி உள்ளது.இந்தகுளுக்கோஸ், ப்ரக்டோஸ் என்பது சர்க்கரையின் வகைகள் ஆகும்.ப்ரக்டோஸ் ஆனது குளுக்கோஸை விட மிகவும் அதிக இனிப்பு தன்மை கொண்டது,எனவே தேனில் அதிகமாக இனிப்பு தன்மை இருந்தால் அதில் ப்ரக்டோஸ் அதிக அளவு உள்ளது என்றும் குளுக்கோஸ் குறைந்த அளவு உள்ளது என்றும் பொருள், தேனில் இனிப்பு தன்மை குறைவாக இருந்தால் அதில் குளுக்கோஸ் அதிக அளவு உள்ளது என்றும் குறைந்த அளவு ப்ரக்டோஸ் குறைந்த அளவு உள்ளது என்றும் பொருள்.

ப்ரக்டோஸ் நீரில் அதிக அளவு கரையும் எனவே ப்ரக்டோஸ் அதிகம் உள்ள தேன் படிகமானால்தேனின்நிறத்திலே சேறு போல அடர்த்தி இல்லாமல் படிவமாகும். குளுக்கோஸ் நீரில் அந்த அளவு கரையாது எனவே குளுக்கோஸ் அதிகம் உள்ள தேன் படிகமாகும்போது,சிறிய சிறிய கற்கண்டு போல் வெள்ளை நிறத்தில் குருனை போல் படிகமாகும்.

இந்த மாதிரி தேன் கட்டியாவது,அல்லதுஉறைவது அல்லது படிகமாக மாற்றம் அடையாமல் நீண்ட காலம் இருக்ககூடிய தேன் வகைகள் உண்டு,அவை காலம் செல்ல செல்ல இறுகி நிற மாற்றம் அடைந்து விடும்.

 

தேவைப்படுவோர்அணுகவும்

 

சதுரகிரி இயற்கை அங்காடி

9486072414(Whatsup, telegram)


சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு

 பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்....

Telegram:

https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3CrTLiCTA

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக