இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

முடவாட்டுக்கால் கிழங்கு


சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுது நாம் மேற்கொள்ளும் பயிற்சிகளும் உட்கொள்ளும் ஊட்டச்சத்தான உணவுகளுமே, பிற்காலத்தில் நமது உடல் வலுவாக மாறுவதற்கு காரணமாக அமைகின்றன. கலை விளையாட்டாகவும், வீர விளையாட்டாகவும் நாம் பின்பற்றி வந்த பலவிதமான விளையாட்டுகள், நமது முழங்கால் மூட்டுகளுக்கும், குதிகாலுக்கும் வலுவை தருவதாகவே இருக்கின்றன.
முடவன் ஆட்டுக்கால் கிழங்கு 

நாகரிக வளர்ச்சியின் காரணமாகவும், விளையாட போதுமான இடமின்மை மற்றும் குறுகிய மனப்பாங்கு காரணமாக, இது போன்ற விளையாட்டுகள் குறைந்து, தொலைக்காட்சி, கணினி என்று பூட்டிய அறைக்குள் விளையாடுவதே, பல குழந்தைகளின் உடல் பருமனுக்கும், எதிர்காலத்தில் தோன்றும் மூட்டுவலிக்கும், முக்கியமான காரணம்.
நமது பாட்டி, தாத்தாக்களின் உடல் வலிமை நமக்கு இருக்கிறதா என்பது கேள்விக்குறி தான். பல பெண்கள் நாற்பது வயதிலேயே பெண் தன்மையை இழந்து வருவதும், ஆண்கள், கழுத்துவலி, முதுகுவலி என்று அலுத்துக் கொண்டிருப்பதும் அதிகரித்து வருவதற்கு உடற்பயிற்சி இன்மையும், மூட்டுகளை சூழ்ந்திருக்கும தசை, தசைநார் மற்றும் சவ்வுகளின் வலிமை குறைவதுமே காரணம். இளம் பிராயத்தில் விளையாடாததால் தான், பிற்காலத்தில் எக்ஸ்ரே, ஸ்கேன் என்று, பல மருத்துவமனைக்கு ஏறி இறங்க வேண்டியுள்ளது.
முழங்கால் மூட்டில் ஏற்படும் பாதிப்பினாலும் சவ்வில் ஏற்படும் வீக்கம் மற்றும் திரவ பற்றாக்குறையினாலும், முழங்கால்வலி உண்டாகிறது. பெண்களுக்கு நொண்டி, பாண்டி, கயிறு தாண்டுவது, கயிறு இழுப்பது போன்றவற்றால், முழங்கால் மூட்டு தசைகள் பலமடைவதுடன், கருப்பை கோளாறுகள் தவிர்க்கப்படுகின்றன.

ஆண்கள், சிலம்பம், கபடி, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கிட்டிப்புல் போன்றவற்றால், மூட்டுகள் நன்கு சுழன்று, திரும்பி வேலை செய்வதுடன், ஆண் ஹார்மோன்கள் அதிகரித்து, போதுமான அளவு சுண்ணாம்பு சத்து சேர்ந்து, எலும்புகளின் பலம் அதிகரிக்கிறது. ஆண் மற்றும் பெண்களுக்கு, நடுத்தர வயதில் தோன்றும் பலவிதமான உடல் மற்றும் மூட்டுவலிகளை நீக்கி, முழங்காலுக்கு வலுவை கொடுக்கும் மூலிகை தான் முடவாட்டுக்கால்.

டிரைனேரியா குர்சிபோலியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட பாலிபோடியேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த புறணிச்செடிகள், பெரிய மரங்களை சார்ந்து வளர்கின்றன.
இவற்றின் வேர்கிழங்குகள் தான் முடவாட்டுக்கால் . இதன் வேர் கிழங்கில் கேட்கின், கவுமாரின், பிளேவனாய்டுகள் மற்றும் தாவர ஸ்டீராய்டுகள் ஏராளமாக உள்ளன. இவை மூட்டுகளில் தோன்றும் வீக்கம், இறுக்கம் மற்றும் வலி ஆகியவற்றை நீக்குவதுடன், மூட்டுகளுக்கு வலிமையை தருகின்றன.

குறிப்பிட்ட சில மலையில் ஆயிரக்கணக்கான மூலிகைகள் இருந்தாலும் குறிப்பாக, சிறப்பான மூலிகையான முடவாட்டுக்கால் அதிகம் தென்படுகின்றன. இந்த மூலிகை மண்ணில் வளராது. பாறைகளின் மேலும், மரங்களின் மேலும் படரும் ஒட்டு இனத்தைச் சேர்ந்தது. அதன் இலையே காய்ந்து சுருண்டு அதன்மேலே கவசம்போல் ஒட்டிக் கொள்ளும். இந்த மூலிகை காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி வளரும் தன்மை கொண்டது.

முடவாட்டுக்கால் மூலிகையை மனிதனின் கருவிலிருந்து இறுதிவரை மருந் தாகப் பயன்படுத்தலாம். இதை மருந்தாகப் பயன்படுத்த பக்குவம் தேவை. கருப்பை வளர்ச்சி முதல் சிறுநீரகம் சிறுத்துப் போதல், உள்ளுறுப்புகள் சுருங்காமல் இருக்கச் செய்யும், புற்றுநோயைப் போக்கும். அதோடு எல்லாவிதமான வாதம், பித்தம், சிலோத்தும நோய்களைச் சமநிலைப்படுத்தி உடலைப் பக்குவப்படுத்தும்.

நன்றி:
டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை.

செய்முறை:
முடவாட்டுக்கால் மூலிகையைப் பதப்படுத்தி மருந்தாகச் செய்யத் தெரியாத வர்கள் இதை சூப் செய்து சாப்பிடலாம். முடவாட்டுக்கால் மேல்தோலைச் சீவி பொடிப் பொடியாக நறுக்கிச் சிறிது மஞ்சள் பொடியும் உப்பும் போட்டு வேகவைத்து பிறகு வடிகட்டி அந்த மூலிகைச் சாறை (சூப்பாக) தினசரி இரண்டு வேளை குடித்து வந்தால் அனைத்து நோய்களும் நீங்கிவிடும். ராஜ உருப்புகள் பலப்பட்டு ஆயுள் விருத்தியாகும். 
இந்த முடவாட்டுக்கால் மூலிகையை குறுக்கில் கால் இஞ்சு அளவிற்கு சிறு துண்டு வெட்டி தோலை சீவி நசுக்கி சிதைத்து தக்காளி மற்றும்புளி சேர்க்காமல் மிளகு,சீரகம்,பூண்டு,சின்னவெங்காயம்,கறிவேப்பிலை,சோம்பு,இஞ்சி,பட்டை,,கிராம்பு கசகசா, தேங்காய் துருவல் மற்றும் ஆட்டுக்கால் சூப்பிற்கு சேர்க்கும் பொருட்களை சேர்த்து லேசாக எண்ணெய் விட்டு வதக்க வேண்டும் பின்பு இதை 1 லிட்டர் நீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும், சூப்பாக இதை தினம் ஒரு வேளை வீதம், 10 நாட்கள் தொடர்ந்து குடித்துவர, கடுமையான முழங்கால் வலி, குதிகால் வலி, முழங்கால் சவ்வு பலவீனம், தசை பிறழ்சி ஆகியன நீங்கும். குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல், உடல் முழுவதும் தோன்றும் வலி, அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்பு நீங்க இதை அனைவரும் குடித்துவரலாம்.




மேலும் விவரங்களுக்கு
www.facebook.com/profile.php?id=100009101367650

https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl
...................................................................................................................................................................  தொடர்புக்கு 

சதுரகிரி இயற்கை அங்காடி
அழகேசன்-94860 72414
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
http://sathuragiriangadi.blogspot.in/
...................................................................................................................................................................

நத்தைச்சூரியின் மருத்துவமும்,ஆச்சரிய செயல்களும்!!!

நத்தைசூரி  இதன் அருகில் நத்தை சென்றால் அதன் ஓடு வெடிக்கும்
இயற்க்கையின் கொடையான புல், பூண்டு, செடி,கொடி,மரம் போன்ற அனைத்தும்  மனிதர்களுக்கும்,விலங்குகளுக்கும் பயன்படுகிறது. இவற்றில் பல நோய்கள் தீர்க்கும் குணம் கொண்டவைகள்.சித்தர்கள் இவற்றை மூலிகை மருத்துவமாக கொண்டு பல விதமான் நோய்களை குணமாக்கிவந்துள்ளனர்.மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும், வழுவையும், நீண்ட  அயுளையும் கொடுக்க கூடிய கற்ப மூலிகைகளின் ஒன்று.
நத்தைசூரி தாவரம் 

      சித்தர்கள் கண்டறிந்த அறிய வகை மூலிகைகளின் ஒன்று நத்தைசூரியாகும் இம்மூலிகை மருத்துவ பயன்பாட்டிற்க்கும்.அதிசய ஜாலங்கள், மற்றும் சித்துக்கள் செய்வதற்க்கும் உதவும் மூலிகை.நத்தைச்சூரியில் மூன்று இனம் உள்ளது என்று  ஆதிவாசிகள் கூறுகிறார்கள்.அவை ஒன்று கொடி இனம் மற்ற இரண்டு செடி இனம்.கொடிவகையை சேர்ந்த மூலிகையின் தன்மைஆட்கள் அதன் அருகில் அறியாமல் சென்றாலே சாட்டை அடித்ததுபோல்  அடிக்கும்.என்று சொல்கிறார்கள்.மேலும் வன
விலங்குகள் அந்த அறிய மூலிகைகள் இருக்கும் இடத்திற்க்கு அருகில் செல்லாதாம்.

 இப்படிபட்ட சக்தி வாய்ந்த நத்தைச்சூரி வேரை  அவர்கள் தாயத்தில் அணிந்தால் வனத்தில் உள்ள மிருகங்களும் விலகி செல்லும் தீய சக்திகளும் அண்டாது என்றும் தற்போது உள்ள மனிதர்கள் மறைமுகமாக செய்யும்  பில்லி, சூனியம், ஏவல் போன்ற செயல்கள் செய்தாலும் தன்னை தாக்காமல் சூரம் பன்னும் சூரிதான் நத்தைசூரி என்று கூறுகிறார்கள்.  இந்த கொடிவகையான நத்தைசூரியின் புகைபடம் விரைவில் வரும், இதே போன்ற தன்மையுடைய  ஒட்டுபலா என்ற அறிய மூலிகையும்.இந்த வனத்தில் உண்டு , இந்த மூலிகைகளின் அருகில் மனிதர்களும் விலங்குகளும் சென்றால் சடிர் என்று ஒட்டும். ஒட்டிய இடத்தில் தீ புண் போல் ஆகிவிடும், இதன் வடிவம் பேயத்தி இலைகள் போன்று இருக்கும். இதன் அருகில் நாம் அமர்ந்து இருந்தால் கொடிய விலங்கும் கூட வராது,
                                                       செடிவகைஉள்ளநத்தைச்சூரி.விலங்குகளுக்கும்,பறவைகளுக்கும் மனிதர்களுக்கும், அதன் அருகில் இருக்கும் தாவரங்களுக்கும்.ஒரு அரிய உணவாக பயன்படுகிறது.இந்த அறிய தாவரம் செம்மண் கானும் நிலங்களில் அதிகமாக காணப்படுகிறது.  இந்த தாவரத்தின் விதையை அதிகமாக் விரும்பி சாப்பிடும் பறவைகள் காடை, கவுதாரி, புறா போன்ற  பறவைகள் உண்பதால் இதன் உடல் கட்டு அழகாகவும் காணப்பட்டு நரம்பு எழும்பு தசைகளும்  இரும்பு போல காணபடுகிறது.
நத்தைசூரி விதை 
       
இதை சாப்பிடுவதால் அவற்றுக்கு போகசக்தி மிக அதிகமாகி அதன் வீரியம் அதிகரிப்பதையும். கண்டறிந்தை மனிதர்கள் தனக்கும் இந்த போக சக்தியும் ஆண்மையும் அதிகரிக்கவேண்டும்.என்று இந்த பறவை களை வேட்டையாடி சாப்பிட ஆரம்பித்தார்கள் அதனால் இந்த பறவை இனமே குறைந்து வருகிறது.
  சித்தர்கள் கூரிய மஹா மூலிகைகளின் ஒன்று நத்தைசூரி உலகத்தில் உள்ள மூலிகை எல்லாவற்றிக்கும் சாபம் உண்டு ஆனால்
நத்தைசூரி என்கிற மூலிகைக்கு மட்டும் சாபம் நிபர்த்தி தேவையில்லை. இந்த நத்தைச்சூரியை பிடுங்கி வந்து உலர்த்தி நன்றாக சூரணம் செய்து அதனுடன் பணங்கற்கண்டு சேர்த்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் அதிக வலிமை உண்டாகும்.
பெண் நத்தைசூரி 
 நத்தைசூரி விதையை தண்ணீர்விட்டான் கிழங்கு சாறும், பசும்பாலும் சேர்த்து கொதிக்கவைத்து  இந்த விதையை புட்டவியல் செய்து உலர்த்தி பவுடராக்கி பணங்கற்கண்டுடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வர நீண்ட நெடுங்காலம் நோயின்றி வாழலாம் என்கிறார்கள்.அத்துடன் அனைத்து சித்துக்களும் உண்டாகும். இதே போன்று தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் வேறு எந்த கற்ப மருந்தும் தேவை படாது. வியாதிகளும், எதிரிகளும் நெருங்காமல் காத்துகொள்ளும்.
இந்த நத்தைசூரியை  முன்னோர்கள் நமது கிராமங்களில்  நத்தைசூரியும், கருப்பட்டியும் சேர்த்து தேத்தண்ணீராக குடித்து வந்தார்கள்
இந்த நத்தைச்சூரியை பார்த்து நம் தாத்தா,பாட்டி,இந்த நத்தைசூரியின் விதையை காலையில் கொதிநீரில் போட்டு தேத்தண்ணீராக குடித்தனர்.இதை அருந்தும் போது  டீ, காபி போன்றவை அருந்தக்கூடாது என்றார்கள்.இந்த முறையை பயன்படுத்திய அவர்கள்நோயின்றி உடலை வழுவாக வைத்து பாட்டியும்,தாத்தாவும்  100 வயதிற்க்கு மேலும் தங்களுடைய உதவிக்கு ஊண்டுகோல்யின்றி வாழ்ந்தார்கள்
  மேலே குறிப்பிட்டபடி இந்த அபூர்வ நத்தைசூரியை சாப்பிட்டு வரஉடல் சூடு தணிந்து  சீரணசக்தி அதிகரிக்கும். பிராய்லர் கோழி அடிக்கடி சாப்பிடுவதால் ஏற்ப்படும் ஊளைச்சதையை இருக்கும்.இரத்தகுறைவினால் ஏற்படும்  உடல் பருமனையும் குறைக்கும், சவ்வு தேய்வினால் உண்டாகும் வலிகள் தீரும்.பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்ப்படும் குறுக்கு வலியை சரிசெய்யும். தாய்மார்களுக்கு தாய்பால் அதிகரிக்கும்
கேன்சர் நோயாளிகளுக்கும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் இதை கொடுத்து வந்தால்  எலும்புருக்கி நோய்கிருமியை சரிசெய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய் கிருமிகளின் வீரியத்தை குறைக்கின்றது. இப்படி பல நன்மைகளை செய்யக்கூடியவைதான்.


மேலும் விவரங்களுக்கு
www.facebook.com/profile.php?id=100009101367650


https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl

...................................................................................................................................................................  தொடர்புக்கு 

சதுரகிரி இயற்கை அங்காடி
அழகேசன்-94860 72414
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
http://sathuragiriangadi.blogspot.in/...................................................................................................................................................................
நன்றி 
திரு.கண்ணன் அவர்கள் ,


தாது புஷ்டி லேகியம்-ஆண்மை - இழந்த சக்தியை மீண்டும் கொடுக்கும்

 தாது விருத்தி லேகியம் ஆண்மையை விருத்தி செய்வதில் மிக வல்லமை மிக்கது.இது வெறும் ஆண்மை விருத்தி லேகியம் மட்டுமல்ல. நம் உடலில் உள்ள சப்த தாதுக்களை நல்ல நிலையில் இருத்தி, உடலின் ஆரோக்கியத்தன்மையை நிலைநாட்டும்.

சப்த தாதுக்கள் என்னும் ஏழு வகைத் தாதுக்கள் நம் உடலில் சரியாக இருந்தால், உடலில் நோய்கள் என்பதே இல்லை.சர்க்கரை வியாதி, சப்த தாதுக்களின் குறைவால்தான் நேருகிறது .சர்க்கரை வியாதியால் தாதுக்கள் நலிந்து, அந்தரங்கம் என்பது வெறும் மனதின் ஆசையுடன் நின்று விடுகிறது,உடல் தன் இயலாமையால் ஒத்துழைப்பதில்லை.
இந்த இயலாமை, பல குடும்பங்களில் விவாக ரத்து என்ற மோசமான நிலை வரை சென்றுவிடுகின்றன.அதை இந்த தாது விருத்தி லேகியம் 48 நாட்களில் சரி செய்யும். பல கூடாத பழக்க வழக்கங்களால் உண்டான வெட்டையினால் ஏற்பட்ட உடல் பாதிப்புகளையும் இது விரைவில் குணமாக்கும்.

சப்த தாதுக்கள் என்பன, நிணநீர், இரத்தம்,தசை,கொழுப்பு,எலும்பு,மஜ்ஜை மற்றும் சுக்கிலம் ஆகியனவாகும்.

இந்த சப்த தாதுக்கள் நிழல் கிரகங்களான இராகு,கேது நீங்கிய சப்த கிரகங்களுடன் தொடர்பு கொண்டவை எனவே, இந்த சப்த தாதுக்களை சரி செய்தால் சப்த கிரகங்களும் சரியாகும். இவை ஒவ்வொன்றிற்கும் உள்ள மூலிகைகளைச் சேர்ப்பதால் உடலும் மனமும் , வாழ்வும் சரியாகும்.கிரகப் பெயர்ச்சிகள் நம்மை பாதிக்குமோ என்ற அச்சமின்றி,சிறப்பாக வாழலாம்.

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் இந்த தாது விருத்தி லேகியத்தில் கலந்துள்ள மூலிகைகளைப்பற்றி, இனி பார்க்கலாம்.
பூனைக்காலி விதை

இவை சப்த தாதுக்களை வளப்படுத்த உதவும்.இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும்.அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக் கூடியது. சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.உடலின் கற்றாழை நாற்றமும் ,மூல நோயும் குணமாகும்.

அமுக்கராக் கிழங்கு
அசுவ கந்தி எனும் இம்மூலிகை உடலுக்கு அழகான சதையமைப்பும் , வலுவான உடல் அமைப்பையும் , நரம்புகளுக்கு ஊக்கமும் மற்றும் நரம்புகளை முறுக்கேற்றவும் உதவுகிறது . அந்தரங்கத்தில் தளர்ச்சியை போக்கக் கூடியது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.

இந்திய ஜின்செங் என்றழைக்க்கப்படும் இந்த மூலிகை உடலுக்கு மிக வலு கொடுக்கும். விளையாட்டில் ஏற்படும் சதை உடைவு , சவ்வுக் கிழிவு இவற்றை உடனே சரி செய்திடும்.

அமுக்கராக் கிழங்கினால் உஷ்ணம் , பாண்டு ,சுரம் , வீக்கம் , துர்நீர் , வெட்டை , கட்டிகள் , சலதோஷம் இவைகள் போகும்.

பூமிச்சக்கரைக் கிழங்கு
உடலுக்கு வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும். அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக் கூடியது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது. இதனால் அதி உஷ்ணம் சுரம்  , மூலம்  போகும்  உடல் பூரிக்கும்.

திரிகடுகு
திரிகடுகு சூரணம் என்பது  சுக்கு , மிளகு , திப்பிலி மூன்றும் சேர்ந்த அற்புதக் கலவை .உடலுக்கு நல்ல பசியைக் கொடுத்து உடம்பை உரமாக்கும்.

திரிபலாதி
திரிபலாதிச் சூரணம் என்பது  கடுக்காய் ,நெல்லி வற்றல்  , தான்றிக்காய்  மூன்றும் சேர்ந்த அற்புதக் கலவை .உடலுக்கு நல்ல உரத்தைக் கொடுத்து உடம்பை இறுக்கி இரும்பு போலாக்கும்.

விஷ்ணுகிராந்தி

விஷ்ணு கிராந்தி, தேகத்தில் உள்ள பல பிணிகளை நீக்கும்.உஷ்ண பேதி , சீத பேதி இவைகள் நீங்கும்.விஷ்ணு கிராந்தியை எடுத்து கொட்டைப் பாக்களவு பாலில் அரைத்து ஒரு மண்டலம் உண்ண, எலும்பைப் பற்றிய அஸ்திசுரம் போகும்.மறந்து போன அனைத்தும் ஞாபகத்துக்கு வரும்.இப்பிறவி மற்றும் முற் பிறவியில்,உள்ள அனைத்து விஷயங்களும் நினைவிற்கு வரும்.கண்பார்வை மிக நீண்ட தொலைவு வரை தெரியும்.

மெலிந்து கரைந்து போன தேகம் இரும்பு போலாகி கறுத்து மின்னும்.சுவாசம் மீண்டும் கைவரப் பெற்று சுழிமுனை திறந்து ஞானம் சித்திக்கும்.இவ்வளவு அற்புத சக்தி நிறைந்தது விஷ்ணு கிராந்தி.

நிலப்பனங்கிழங்கு
நிலப் பனங்கிழங்கு உடலுக்கு வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும். அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக் கூடியது. சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.இதனால் உஷ்ணம் , சுரம்  , மூலம் இவைகள் நீங்கும் .

தண்ணீர் விட்டான் கிழங்கு

தண்ணீர் விட்டான் கிழங்கு உடலுக்கு வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும். அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக்கூடியது. சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.மேலும் இதனால் உஷ்ணம் , சுரம்  , மூலம் இவைகள் நீங்கும். .இளமையைத் தக்க வைக்கும் .உடல் பூரிக்கும்.

ஒரிதழ்த்தாமரை
ஓரிதழ்த் தாமரை சுக்கிலத்தையும் , அழகையும் உண்டாக்கும்.இதைத் தினம் உண்ண வெள்ளை , வெட்டை , நீர்ச்சுருக்கு , நீரெரிச்சல் முதலிய மேக சம்பந்தமான பிணிகள் நீங்கும். மோரில் கலக்கி உண்ண கிரகணி முதலிய நோய்கள் தீரும்.

ஓரிதழ்த்தாமரை ஓர் இந்திய வயாக்ரா!

நில ஆவாரை
பற்பல மூல வாயுக்கள் ,சுரம் , சீழ்ச்சிரங்குகள் , வயிற்று வலி , மலக்கட்டை நீக்கும். இதனால் வயதானவர்களுக்கு ஏற்படும் புரஸ்த கோள [PROSTATE GLAND ENLARGEMENT]  வீக்கம் போன்றவற்றை, நீக்கும்.

   மேலும்,இந்த தாது விருத்தி லேகியத்தில் சேர்க்கப்படும் மூலிகைகள் நெருஞ்சில், நீர்முள்ளி விதை , நிலாவரை , தண்ணீர்விட்டான் கிழங்கு  மேற்கண்ட வியாதிகளை,நிரந்தரமாகத் தீர்க்கும்.

நெருஞ்சில் விதை

நெருஞ்சில் விதைக்கு மூத்திரக்கட்டு , சதையடைப்பு , கல்லடைப்பு முதலியவை நீங்கும்.சிறு நீரைப் பெருக்கும் தன்மை உள்ள மூலிகைகள் ஆண்மைத் தன்மையை பெருக்கும் .

நீர்முள்ளி விதை
 நீர்முள்ளி விதைகள் சிறு நீரைப் பெருக்கும்.சப்த தாதுக்களையும் விருத்தி செய்யும்.சிறு நீரைப் பெருக்கும் தன்மை உள்ள நீர்முள்ளி விதை, ஆண்மைத் தன்மையை பெருக்கும் .நீர்முள்ளி விதைக்கு பிரமேகம் , அதிசாரம் , சுபசோபை , ஆயாசம் இவை நீங்கும்.சுக்கிலமும் விருத்தியாகும்.

சாதிக்காய்
தூக்கம் வராமல் சிரமப்படுவோருக்கும், நரம்புத் தளர்ச்சி உள்ளவருக்கும் சாதிக்காய் தூள்சிட்டிகை அளவு இரவு படுக்கும் போது பாலில் சாப்பிட தூக்கம் வரும் நரம்புவலுப்படும்.சாதிக்காயை அளவாகப் பயன்படுத்தினால், அந்தரங்க வாழ்வில் சிறப்பான பலன்கள் கிட்டும்.

மேலும்,வயிற்றிலுள்ள வாயுவை அகற்றல், மலத்தைக் கட்டல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் பேதி, கிரகணி, தாது நட்டம் முதலியன குணமாகும். உடலுக்கு வலு உண்டாகும்.சாதிக்காயின் மேலே மூடியுள்ள தோலான சாதிபத்திரியே, தாது விருத்திக்குரிய லேகியங்களில் சேர்க்கப்படுகிறது.




முருங்கைப்பூ
பூவைப் பருப்புடன் சமைத்துச் சாப்பிட்டால் பித்த வெப்பம் அகலும். கண் எரிச்சல், நா கசப்பு, நீர் ஊறுதல் தீரும். பூவைப் பாலில் போட்டு இரவு காய்ச்சிக் குடித்தால் ஆண்மை மிகும்.

விளாம் பிசின்
விளாம் பிசின் உலர்த்தி தூள் செய்து காலை, மாலை 1 சிட்டிகை வெண்ணையுடன் கலந்து சாப்பிட வெள்ளை, நீர் எரிச்சல், மேக நோய், உள் உறுப்பு இரணம், அதிசாரம், பெரும்பாடு ஆகியவை தீரும்.
விளாம் பிசின் ஒரு துண்டை வாயில் அதக்கி அதன் ரசத்தை மட்டும் விழுங்கி வந்தால் வறட்டு இருமல் நீங்கும்.
நாட்பட்ட ரணங்களுக்கு விளாம் பிசினைக் கொண்டு செய்யப்படும் பூச்சு மருந்து பயன் படுகிறது.
இப்படிப்பட்ட பல அதி அற்புத மூலிகைகள் , ஒருங்கே சேர்ந்த சிறப்பு கலவை தான் இந்த தாது விருத்தி இலேகியம்.
வெறும் ஆண்மைக்குறைபாடு மட்டும் நீக்காமல் , இலவச இணைப்பாக உடலின் அனைத்து வகையான வியாதிகளையும், சீர்செய்யும் இந்த அற்புத மூலிகை மருந்தை முறையாக பயன்படுத்தி, சிறப்பாக வாழலாம்.


மேலும் விவரங்களுக்கு
www.facebook.com/profile.php?id=100009101367650


https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl


...................................................................................................................................................................

  தொடர்புக்கு 
சதுரகிரி இயற்கை அங்காடி
அழகேசன்-94860 72414
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
http://sathuragiriangadi.blogspot.in/
...................................................................................................................................................................

நன்றி
 
திரு..கண்ணன் அவர்கள் ,