இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 14 ஜூலை, 2014

சுத்தமான பனங்கருப்பட்டி ,பனங்கற்கண்டு மொத்தமாகவும்,குறைந்த அளவும் கிடைக்கும்,-தென்னை கள்ளு ,அதக அளவு சுண்ணாம்பு மற்றும் ரேசன் சர்க்கரை போன்ற எந்த ஒரு கலப்படமும் இல்ல பனை பொருள்கள் கிடைக்கும்.

பனங்கல்கண்டு மற்றும் கருப்பட்டியில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் அடங்கியுள்ளன. கருப்பட்டி இயற்கையாகவே  உடலை குளிர்சியடையச் செய்யும். அதன் கிளைசீமி இன்டெக்ஸ் எனப்படும் சர்க்கரை உடலில் கலக்கும் வேகத்தின் குறியீடு வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழ். இதனால் சர்க்கரை மற்றும் பல கோடிய நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். கருப்பட்டியில் கலபினம், ஒட்டுரகம் இல்லை; உரம் பூச்சி மருந்து அடிக்கப்படுவதில்லை; அதை தயாரிக்கையில் விஷகெமிக்கல்கள்  சேர்க்கப் படுவதில்லை; ஈரலையோ, உடலின் ஹார்மோன் அமைப்பையோ பாதிப்பதில்லை; எந்த நோயையும் வரவழைப்பதில்லை; மாறாக வந்த நோயை போக்கி வரும் நோயையும் வரவிடாது விரட்டும்.போதை நோய் உண்டாக்குவதில்லை; ஒரு துளியும் பாதிப்பில் நம்மை தள்ளுவதில்லை; மாறாக அமிர்தம் போல அனைத்து நலனையும் தருகிறது.சீர்கேட்டு இருக்கும் உடல் இயக்கத்தையும் சீரான சமநிலைக்கு கொண்டுவருகிறது
இவை மட்டுமின்றி மருத்துவத்துறையில், சித்த-ஆயுர்வேத மருந்துகளில் பெருமளவு பனையின் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. உணவே மருந்து என்னும் நியதிப்படி, பனையின் ஒவ்வொரு பகுதியும் மருந்தாக பயன்படுகிறது. கால சூழலுக்கு ஏற்றாற்போல வெய்ய காலத்துக்கு பதநீர் நுங்கு, குளிர் காலத்தில் பனங்காய் என உடலுக்கு தேவையானதை தேவைப்படும் நேரத்தில் தாய் போல வழங்கும். சர்க்கரைக்கு மாற்றாக மட்டும் பனை மரம் சரியாகப் பயன்படுத்தப் பட்டாலே இன்று உள்ள பெரும்பாலான நோய்கள இல்லாமலும் அதற்கான மருத்துவ செலவுகள் மற்றும் மருந்துகள் அவசியமின்றியும் போகும். இதற்கு மேல், பனையின் பிற பகுதிகளின் பயன்கள் தனி! பண்ணாட்டு கம்பெனிகளின் பல லட்சம் கோடி மருந்துவியாபாரம், ஹாஸ்பிட்டல்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வர்த்தகம், இந்திய மருத்துவ 'தொழில்' போன்றவை பனையால் கடுமையாக பாதிக்கப்படுகிறது.





பெண்கள் பிரசவம் ஆனதிலிருந்து ஒருவாரத்திற்கு இந்த சுக்குகருப்பட்டியை இதேபோல்சீவி அதில் மிளகை பொடித்து போட்டு கொஞ்சம் பசு நெய் ஊற்றி லட்டுபோல் உருட்டி அரிசி சாதத்தில் போட்டும் அப்படியேவும்.. சாப்பிடுவார்கள் .. மேலும் வருத்து இடித்த எள்ளு பொடியை லட்டுடன் கலந்தும் சாப்பிடுவார்கள்...அப்படி சாப்பிடும் போது குழந்தை பிறந்தபின் கர்பப்பையின் உள்ளே மீதம் ஒட்டிக்கொண்டிருக்கும் தொப்புள் கொடி அல்லது வேறு ஏதாவது அசுத்தங்களின் மிச்ச மீதங்கள் அனைத்தையும் தங்கவிடாமல் வெளியேற்றிவிடும்

வெள்ளை சர்க்கரையை சாப்பிடும்போது என்னவெல்லாம் நடக்குமென்று பாருங்கள்.


 எந்த சத்தும் இல்லாத இந்த சர்க்கரையை ஜீரணிக்கவே உங்கள் உடலில் ஏற்கனவே உள்ள விட்டமின் பி, கால்சியம் போன்ற சத்துக்கள் உறுஞ்சி எடுக்கப்படும். இந்த சர்க்கரை பின்னர் குளுக்கோசாகவும், ப்ருக்டோசாகவும் பிரியும். குளுக்கோஸ் உடலில் சாதாரணமாக ஜீரணிக்கப்படும். ஆனால் இந்த ப்ருக்டோஸ் ஈரலால் மட்டுமே ஜீரணிக்க முடியும். தொடர்ந்து சர்க்கரை உண்பதால் ஈரலுக்கு கடுமையான அழுத்தம் ஏற்பட்டு, ஈரலில் கொழுப்பு தேங்கி, அது இன்சுலின் சுரப்பை பாதித்து சக்கரை நோய்க்கு வழிவகுக்கிறது. ப்ருக்டோஸ் இன்சுலின் சுரப்பியை மட்டுமல்ல மூளைக்கு உணவு தேவை குறித்த தவறான தகவலை கொடுத்து (ஹார்மோன் சுரப்பை தடை செய்து) அதிகளவு உணவேடுக்க செய்கிறது. இதனால் உடல் பருமன் கூடிக்கொண்டே செல்கிறது. அதேநேரம் இதய நோய்களின் தாக்கமும் கூடிக்கொண்டே செல்கிறது. அதேநேரம், சர்க்கரை உற்பத்தியின் போது கலக்கப்பட்ட பல்வேறு கெமிக்கல் விஷங்கள், உடலின் இயல்பு சமநிலையை பாதித்து பல்வேறு பெருவியாதிகளுக்கு அடித்தளமிடுகிறது. ஹார்மோன் சுரப்பின சமநிலை தடுமாறுவதால் உடலின் மொத்த இயக்கத்திலேயே தடுமாற்றம் ஏற்படுத்துகிறது. கேன்சர், கர்ப்பப்பை, ஆண்மை-குழந்தையின்மை, கிட்னி-கணையம் என்று உடலின் முக்கிய உறுப்புகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் பாதிக்கிறது.


இதற்கும் மேலாக இந்த விஷம், நம் மூளையை சிறிது சிறிதாக பாதிக்க துவங்குகிறது. நம் மரபணுவையும் பாதித்து அடுத்த தலைமுறையை இயற்கையிலேயே நோயுடைய தலைமுறையாக்குகிறது. மேலும்  சர்க்கரை என்பதே ஒரு போதையாக (Sugar Addiction) மாறிவருகிறது. நீங்கள் சர்க்கரை உடலில் சேர்க்காவிட்டால் உங்களால் இயல்பாக இருக்க முடியாதவாறு நம் புத்தி தடுமாறும். சர்க்கரையை உண்டால் சாராயத்தை விட மோசமான கெடுதல்களை செய்துவிடும்.

சர்க்கரை உட்கொள்வதால் நம் உடல் என்னென்ன நோய்களை உருவாக்கிக் கொள்கிறது, என்னென்ன நோய்களுக்கு அடித்தளமிடுகிறது என்று பார்த்தால்,
•           சர்க்கரை வியாதி
•           பல்வேறு வகையான கான்சர்கள் (புற்று நோய்கள்)
•           இதயக்கோளாறு
•           உடல் பருமன் - கொலஸ்ட்ரால்
•           ஈரல் நோய்
•           சிறுநீரக-கிட்னி கோளாறுகள்
•           கனைய-சிறுநீரக கற்கள்
•           மனச்சோர்வு-பதற்றம்
•           மலச்சிக்கல்
•           குழந்தையின்மை
•           பொரிந்து போகும் எலும்புகள்
•           அல்சைமர் நோய்
•           நோய் எதிர்ப்பு சக்தி பலவீனம்
•           தாதுக்குறைபாடு
•           ஹார்மோன் கோளாறுகள்
•           நாட்பட்ட தலைவலி
•           மூட்டுதேய்மானம்
•           ஒட்டுக்குடல்
•           தசை பிறழ்வு நோய்
•           ஆஸ்துமா
•           கண் மற்றும் பல் கோளாறுகள்
இன்னும் பெயர் கண்டறியாத நோய்கள் பல!. இப்படி சிறிது சிறிதாக பல பெருவியாதிகளுக்கு வெள்ளை சர்க்கரை நம்மை கூட்டி சென்று விடுகிறது.


மேலும் விவரங்களுக்கு
www.facebook.com/profile.php?id=100009101367650


https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl


----------------------------------------------------------------------------------------------

                                                            தொடர்புக்கு 
சதுரகிரி இயற்கை அங்காடி
அழகேசன்-94860 72414
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
http://sathuragiriangadi.blogspot.in/
-----------------------------------------------------------------------------------------------

நன்றி 
ந.சசிகுமார் பக்கங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக