இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 26 ஜூன், 2015

நாத பொடி-முழுமையான தீர்வு :


மூலிகை கலவையில் உள்ள மூலிகைகள்(சித்தர்கள் தொடர்பு உள்ள குரு ஒருவர் கூறியது):
தண்ணீர்விட்டான் கிழங்கு ,மகா வில்வம் ,முருகை பூ ,வெண்தாமரை ,ஓரிதழ்,சிறிய நங்கை ,கீழாநெல்லி ,சம அளவு நிழலில் காயவைத்து தனித்தனியாக பொடித்து ஒன்றாக கலந்து செய்யலாம்.

இந்த மூலிகை கலவையை  காலை ,மாலை என தொடர்ந்து  48 நாட்கள் பாலில் கலந்து அருந்தினால் நீங்கள் இழந்த சக்திகளை பெற்றுவிடலாம்

இந்த மூலிகை கலவை உடல் வெப்ப நிலையை கட்டுக்குள் கொண்டுவந்து ,விந்து உற்பத்தியை அதிகமாகிறது மேலும் நீர்த்து போன   விந்தை கெட்டியாக்குகிறது,அதுமட்டுமல்லாமல் தரமான விந்தணுக்களை உருவாக்கும். உடல் எடை அதிகரிக்க வழி  வகுக்கும்,உடல் பொன்நிறமாக மாற்றம் அடையும் ,ஆண் குறியை வழுவாக்கும்,விந்து அதிக அளவில் வீணாவதால்
  உடல் மெலிந்து கன்னங்களின் சதை நலிவுற்ற நிலையில் ஒடுங்கி சிலருக்கு காணப்படும் இவர்களுக்கு இந்த கலவை ஒரு வர பிரசாதம்.திருமணம் செய்ய இருக்கும் ஆண்கள் 48 நாட்கள் இந்த கலவையை எடுத்து கொண்டால் உடல் உரமாகி பலம் பெறலாம்.

வெறும் விந்தணுக்கள் பிரச்சனையை மட்டும்மல்லாது காய்ச்சல் ,சோகை,  பசியின்மை,இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றி சுத்தமக்குகிறது.

கல்லிரல் சம்பதமான அனைத்து நோய்களையும் வராமல் தடுக்கும்.

சில மூட நம்பிக்கை தற்போது உள்ள ஆண்களிடம் காணாப்படுகிறது அதாவது

ஆண் குறி அளவில் பெரியதாக இருந்தால் தான் நல்லது,இல்லை என்றால் ஆண்மை குறைவு என்ற எண்ணம் வந்துவிடுகிறது இது மிகவும் தவறு ,இறைவன் படைப்பில் ஒவ்வொரு ஆணுக்கும் அளவுகள் மாறுபடும்,உங்களுக்கு விறைப்பு தன்மை இருந்தால்போதுமானது,        

இளம்வயதினர் இடையே தூக்கத்தில் விந்து வெளியேறுதல்,என்பது அவர்களுக்கு பெரிய பயமாகவும் ஆண்மை குறையாகவும் கருதுகின்றனர் இது மிகவும் தவறான கருத்தாகும்,மாதத்தில் அதிகப்பட்சசமாக 1 to 4 வரை வெளியேறுவது தவறில்லை ,திருமணம் ஆனவர்களுக்கு இது பொருந்தாது,பத்திரத்தில் நீரை ஊற்றும் போது அதன் கொள்ளளவு முடிந்தவுடன் தரையில் சிந்துவது இயல்பே அதுபோலதான் விந்து உற்பத்தி அதிகமாக இருந்து ,விந்து பை கொள்ளளவு கடந்தவுடன் ,எதாவது ஒரு வகையில் விந்து வெளியேறிவிடும்,இது படைப்பின் அதிசயமே,ஆனால் சரியான முறையில் சத்தான உணவு பொருள்கள் உண்ணாமல் ,அதிகப்படியான விந்து வெளியேற்றம் இருந்தால் தான் தவறு,

இது போலவே நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபடவில்லை என்றாலும் ,விரைவில் விந்தணுவெளியேறினாலும் ஆண்மை குறைவு என்ற எண்ணம் உள்ளது ,இது தவறான கருத்தாகும்,சராசரியாக உடலுறவில் ஈடுபட்ட 5 நிமிடதிற்குள்ளாகவே விந்து வெளியேறிவிடும்,இது அறிவியல் ரீதியான உண்மை ,

எனவே தவறான நம்பிக்கைகளை மனதில் பதியவிடாமலும்,சத்தான சரிவிகித உணவை உண்டு வளமாக வாழுங்கள்,சத்தான உணவு என்றால் பாதம் ,பிஸ்தா ,முந்திரி இன்னும் பல விலை உயர்ந்த பொருள்கள் அல்ல,நம் முன்னோர்கள் இந்த பொருள்களை உண்டுதான் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்?

அவர்கள் உண்டது கம்பு ,சோளம் ,ராகி போன்றவற்றை களியாகவும்,கூழாகவும்,சிலர் சாமை,திணை,வரகு ,குதிரைவாலி போன்ற சிறுதானியங்களையும் தான் எடுத்து கொண்டனர்,அந்த காலத்தில் அரிசிலேயே 1008 ரகம் இருந்ததாக கூறுவர்கள்(ஆதாரம் இல்லை )ஆனால் நாம் பட்டை தீட்டிய அரிசி மற்றும் வெள்ளை கோழி ,ரசாயனம் மிகுந்த துரித உணவுகளே விரும்பி உண்ணுகிறோம்.சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் ..        

மேலும் விவரங்களுக்கு
1.Sathuragiri Iyarkai Angadi (https:// 
www.facebook.com/profile.php?id=100009101367650)
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா----------------------------------
தொடர்புக்கு
சதுரகிரி இயற்கை அங்காடி
அழகேசன்-94860 72414,
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
http://sathuragiriangadi.blogspot.in
-----------------------------------------------------------------------------------------------
நன்றி 
திரு.கண்ணன் அவர்கள் 
........................................................................................................................................................................................... 

புதன், 24 ஜூன், 2015

மூலிகை தூப பொடி (கணபதி,நவகிரக ஹோமம் செய்த பலனை கொடுக்கும்)

சதுரகிரிக்கு சென்று வருகிறீர்களே,சாம்பிராணி ,குங்கிலியம் போன்ற பொருள்கள் தரக்கூடாத என்று நண்பர்கள் பலர் கேட்ட போது,அடுத்த முறை சதுரகிரி மலையில் சிவனடியார் ஒருவர் 18 மூலிகைகளை கூறி,இதை கொண்டு தூபம் போட்டால் கணபதி,நவகிரக ஹோமம் செய்த பலனை கொடுக்கும்,தினமும் போடலாம் இல்லை என்றால் செவ்வாய்,வியாழன்,ஞாயிறு செய்தால் சிறப்பாக இருக்கும் என்றார். தற்போது பெரும்பான்மையான மக்கள் விறகு அடுப்பு உபயோகிப்பது இல்லை இதனால் கரிதனல், மேலும் தூபக்கால் கிடைப்பதும் கடினம் ,நாம் சாம்பிராணி ,குங்கிலியம் போன்றவற்றை வாங்கி வைத்தாலும்,உபயோக படுத்த மக்கள் தயாராக இல்லை என்பதால் அதை குறித்து வைத்ததோடு விட்டுவிட்டோம்,
தற்போது கிராமத்து நண்பர் ஒருவர் கேட்டு கொண்டதற்காக,சோதிப்பதர்க்காக அந்த 18 மூலிகைகளை பறித்து சுத்தம் செய்து கலந்து கொடுத்தோம்,அவர் தொடர்ந்து 21 நாட்கள் உபயோகித்து பார்த்து நன்றாக இருப்பதாக கூறினார் முழுபலனையும் கூறவில்லை,கடந்த மூன்று மாதங்களாக வீடு மற்றும் கடைகளில் உபயோக படுத்துகிறார்.
தற்போது புதிய இடத்தில் கடை மாற்றம் செய்துள்ளோம்,இங்குள்ள கடை உரிமையாளர்,இந்த மூலிகை தூப பொடியை உபயோகித்து நன்றாக உள்ளது, தூக்கமின்மை போகிறது,கடையில் நல்ல வித்தியாசம் தெரிகிறது என்றார்.       

இதில் கலந்துள்ள மூலிகைகள்
1.சாம்பிராணி
2.
விலாமிச்சை வேர்
3.
தும்பை                                                                         4.தேவதாறு                                                                      5.அருகம்புல் 
6.குங்கிலியம்                       
7.
வேப்ப இலை                                                                              8.நொச்சி இலை                                                                                      9.வில்வ இலை                                                                                 10.வெண்கடுகு                                                                          11.கருங்காலி
12.நன்னாரி                                                                       13.வெட்டிவேர்                                                                    14.நாய்க்கடுகு                                        
 15.ஆலங்குச்சி                                                             16.அரசங்குச்சி                                
  17.நாவல் குச்சி                                                                            18.மருதாணி விதை



போன்ற 18 வகையான மூலிகைகளை தனித்தனியாக பொடித்து சம அளவு எடுத்து கலந்து காற்று புகாத பாத்திரத்தில் சேமித்து வைத்து உபயோகபடுத்தலாம்.  

இந்த மூலிகை கலவையை கொண்டு தூபம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் (சிவனடியார் கூறியது,சோதித்து பார்க்கப்பட்டது மேலும் பரிசோதனைக்கு உட்பட்டது)
1.கணபதி மற்றும் நவ கிரக ஹோமம் செய்த பலனை எளிமையாக பெறலாம்(தடைகள் விலகும்,எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும்,ஏவல்,பில்லி சூனியம் போன்ற தடைகள் நீங்கும்,நவ கிரக தோஷங்கள் நீங்கிவிடும் ,எதிரிகள் தொல்லை,இறந்தவர்களின் சாபம் போன்றவை போய் விடும்)
2.கடை மட்டும் தொழில் நிலையங்களில் உபயோக படுத்த வியாபாரம் பெருகும்,எதிரிகள் தொல்லை விலகும்.
3.வீட்டில் நல்ல சக்திகள் நிலை பெரும்,வீண் சண்டை ,அமைதி இன்மை ,தூக்கமின்மை போன்றவை அகலும்.
4.நோய் தொல்லை நீங்கும் ,எந்த விஷ கிருமிகள் மற்றும் விஷ ஜந்துக்கள் வீட்டில் தங்காது.
பொதுவாக அறிவியல் ரீதியாக சாம்பிராணி தூபம் போடுவதால்,வீடு மட்டும் கடைகளில் உள்ள அனைத்து இடங்களில் உள்ள கெட்ட காற்றை அகற்றும் மேலும் விஷ ஜந்துக்களை அண்ட விடாமல் வெளியேற்றும் ,எதிர்மறை எண்ணங்களை குறைக்கும்.மழை காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை குறையாமல் அதிகரிக்கும்.

இந்த மூலிகை துப பொடியை தயார் செய்து,நீங்களும் உபயோகித்து பலன்களை மறக்காமல் எழுதுங்கள் ,உங்களால் தயார் செய்ய இயலவில்லை என்றால் எங்களிடம் தொடர்ப்பு கொள்ளுங்கள்.  
மேலும் விவரங்களுக்கு
1.Sathuragiri Iyarkai Angadi (https:// 
www.facebook.com/profile.php?id=100009101367650)
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா----------------------------------
தொடர்புக்கு
சதுரகிரி இயற்கை அங்காடி
அழகேசன்-94860 72414,
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
http://sathuragiriangadi.blogspot.in
-----------------------------------------------------------------------------------------------
நன்றி 
திரு.கண்ணன் அவர்கள் 
-----------------------------------------------------------------------------------------------
புகைப்படம் :myliddy இணையம்